Skip to main content

ஆறு, பாசன வாய்க்கால்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

Published on 29/06/2018 | Edited on 29/06/2018

காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு கடைமடை பாசன பகுதியில் புதர் மண்டியுள்ள ஆறு, பாசன வாய்க்கால்களை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். 
 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைமடை பாசன ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் புதர் மண்டிக்கிடப்பதை தண்ணீர் திறப்பிற்கு முன்பே சீரமைத்தால் கடைமடைப் பாசன விவசாயிகளும் பயனடையலாம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.


 

Farmers demand to rehabilitate river and irrigation channels in the irrigation area


 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி ஒன்றியத்தில் தொடங்கி, திருவரங்குளம் ஒன்றியம், அறந்தாங்கி, மணமேல்கடி ஒன்றியம் வரை சுமார் 50 ஆயிரம் ஏக்கர் வரை காவிரி பாசனம் உள்ள பகுதியாக உள்ளது. இந்தப் பகுதிகள் கடைமடைப் பாசனப் பகுதிகளாக உள்ளது. கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டால் 6 நாட்களுக்கு பிறகே கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரும். இதனால் கீரமங்கலம் பகுதியில் உள்ள கறம்பக்காடு, செரியலூர், மேற்பனைக்காடு, நெய்வத்தளி, ஆயிங்குடி போன்ற கிராமங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வந்து சேரும் முன்பே தண்ணீர் அடைக்கப்படுகிறது, இதனால் பல வருடங்களாக புதுக்கோட்டை மாவட்ட கடைமடைப் பாசன விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

இந்த நிலையில் இந்த ஆண்டும் ஜூன் 12 ந் தேதி தண்ணீர் திறக்காததால் கடைமடைப் பாசன விவசாயிகளும் கவலையில் உள்ளனர். மேலும் கடைமடைப் பாசன ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களில் செடிகள், அதிகமாகி புதராக காட்சி அளிக்கிறது. தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்னே இந்த புதர்களை வெட்டி அகற்றினால் தண்ணீர் திறக்கப்பட்டதும் ஒரு நாள் முன்னதாக தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. தண்ணீரும் தடையின்றி பாய்ச்ச வசதியாக இருக்கும். ஆனால் கடைமடைப் பாசனப் பகுதியில் ஆறு மற்றும் பாசன வாய்க்கால் மராமத்து பணிகள் எதுவம் நடக்காததால் புதராகவே காட்சி அளிக்கிறது.


 

Farmers demand to rehabilitate river and irrigation channels in the irrigation area


 

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செங்கோடன் மற்றும் கடைமடைப் பாசன விவசாயிகள் கூறும் போது.. கடைமடைப் பாசனம் என்பது உபரி நீரை நம்பி விவசாயம் செய்வது போல தான். தொடர்ந்து தண்ணீர் வந்தால் மட்டுமே முழுமையாக விவசாயம் செய்ய முடியும் ஆனால் கடந்த பல வருடங்களாக முறை தண்ணீர் என்ற பெயரில் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் தண்ணீர் திறப்பதும். அடுத்த 5 நாட்கள் தண்ணீரை நிறுத்தி வைத்துக் கொள்வதும் வழக்கமாக இருப்பதால் பயிர்கள் கருகிவிடுகிறது. இந்த நிலையில் கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு வரும் வாய்க்கால்களில் புதர் மண்டியுள்ளது. இதனால் தண்ணீரும் வந்து சேருவதில் சிக்கல் ஏற்படும். அதனால் தண்ணீர் திறக்கும் முன்பே புதர்களை அகற்றி வேண்டும் என்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.