Skip to main content

கந்துவட்டி கொடுமையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

Farmer drinking poison due to usur

 

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் ராஜ்குமார்(39). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் ராஜ்குமாரை வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் பூச்சி மருந்து குடித்து உள்ளதாகக் கூறி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் அன்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை செய்தனர்.

 

விசாரணையில், ராஜ்குமார் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கரின் மனைவி ஜெயந்தியிடம் கடந்த 2018 இல் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதேபோல், சிறுபாக்கம் அடுத்த அடரி களத்தூரைச் சேர்ந்த மணிகண்டனிடம் ரூ. 2 லட்சம் வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார். அதில் வட்டியுடன் சேர்த்து ஜெயந்திக்கு ரூபாய் 13.50 லட்சமும், மணிகண்டனுக்கு ரூபாய் 5 லட்சமும் பணம் கொடுத்துள்ளார்.

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஜெயந்தி மற்றும் மணிகண்டன் இருவரும், பெரியநெசலூரில் ராஜ்குமாரைச் சந்தித்து, ஜெயந்திக்கு மொத்தம் வட்டியுடன் சேர்த்து ரூபாய் 32 லட்சமும், மணிகண்டனுக்கு ரூபாய் 8 லட்சமும் பணம் தர வேண்டுமெனவும், ஏற்கனவே கொடுத்த பணம் போக மீதம் உள்ள பணத்தை கொடுக்க வேண்டும் எனக் கேட்டதுடன், ஆபாசமாகப் பேசி, "பணத்தைக் கொடுக்காமல் உயிரோடு ஏன் இருக்கிறாய்" எனத் திட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராஜ்குமார் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. 

 

இதையடுத்து ராஜ்குமார் மனைவி சங்கீதா வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.