Skip to main content

தனிக்கட்சி! - கலைஞர் என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள்; மு.க.அழகிரி பேட்டி!

Published on 21/08/2018 | Edited on 21/08/2018
MKAlagiri-1


கலைஞர் என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன. அதை வெளியில் சொல்ல முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியாதவது,

கலைஞர் நினைவிடத்தில் எனது ஆதங்கத்தை தெரிவித்து விட்டேன். கொஞ்ச நாட்களில் உங்களிடமும் ஆதங்கத்தை தெரிவிப்பேன். கலைஞர் நினைவிடத்துக்கு வருகிற செப்டம்பர் 5-ந்தேதி அமைதிப் பேரணி நடக்கிறது. இதில் 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள். கலைஞரின் உண்மை தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்பதை அமைதி பேரணியில் நிரூபித்து காட்டுவேன்.

தனிக்கட்சி பற்றி கேட்டு வருகிறார்கள். கலைஞர் என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன. அதை வெளியில் சொல்ல முடியாது. அவர் என்ன நினைத்தாரோ அதன்படி செயல்படுவேன்.

ரஜினியுடன் இணைந்து செயல்படுவீர்களா என்று கேட்கிறார்கள். ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அப்படி இருக்கும்போது அவரோடு இணைந்து செயல்படுவதை எப்படி சொல்ல முடியும்? அரசியலில் பின்னால் நடப்பதையெல்லாம் இப்போதே சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்