Skip to main content

ஒரு தீப்பெட்டிக்கு 500 ரூபாய் பரிசளித்த பிரபல நடிகை! ஏர்போட்டில் பரபரப்பு! 

Published on 12/12/2021 | Edited on 12/12/2021

 

 

Famous actress who gifted 500 rupees for a match! Excitement at the airport!

 

பாலிவுட் திரைப்படங்களின் பிரபல நடிகை சன்னிலியோன். கனடா நாட்டின் இந்திய வம்சாவளி பெண். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவரது குடும்பம் பல ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் செட்டிலாகிவிட்டது. கனடா நாட்டின் குடியுரிமையைப் பெற்ற சன்னிலியோன், மாடலிங்கில் பிரபலமானார். பிறகு ஹாலிவுட்டின் பாலியல் கிளர்ச்சியைத் தூண்டும் ஆபாச நடிகையாக அறிமுகமானார். 

 

50- க்கும் மேற்பட்ட ஆபாச படங்களை நடித்திருக்கும் சன்னிலியோன், அதே எண்ணிக்கையிலான ஆபாச படங்களை இயக்கியுமிருக்கிறார். ஆபாச பட நடிகைகளில் சர்வதேச அளவில் முதலிடத்திலும் இருந்திருக்கிறார் சன்னி லியோன். 

 

மிகவும் புகழ்ப்பெற்றிருந்த இவரை 2012-ல் இந்தியாவுக்கு அழைத்து வந்தது பாலிவுட் உலகம். ஹிந்தி திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார். அதன்பிறகு, ஆபாச படங்களில் நடிப்பதையும் இயக்குவதையும் நிறுத்திக் கொண்டார் சன்னி லியோன். 

 

பாலிவுட் படங்களின் முன்னணி நடிகையாக மாறிவிட்ட இவர், ஹிந்தி படங்களை தயாரிக்குமளவுக்கு முன்னேறினார். தவிர, பிரபல ஹிந்தி ஹீரோக்களின் படங்களில் குத்தாட்டம் போடுவதிலும் ஆர்வம் காட்டினார் சன்னி. சில தமிழ்ப் படங்களிலும் ஒற்றை பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். 

 

இந்த நிலையில், தமிழ் படம் ஒன்றில் நடிப்பதற்காக நேற்று (11/12/2021) மும்பையில் இருந்து சென்னை வந்தார் சன்னி லியோன். சென்னை விமான நிலையத்தில் அவரைக் கண்டதும், விமான நிலைய அலுவலர்களிடமும், பயணிகளிடமும் திடீர் பரபரப்பு உருவானது. அவருக்கு அருகில் சென்று பலரும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். ஏர்போர்ட் ஊழியர்கள் பலரும் அவருடன் படம் எடுத்துக் கொள்வதில் தீவிரம் காட்டினார்கள்.

 

விமான நிலைய வரவேற்பாளர் கேம்ப் குமாரும், படக்குழுவின் நண்பரான பாலுவும்  சன்னிலியோனை பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் அமர வைத்தனர். காரில் உட்கார்ந்ததும், கேம்ப் குமாரிடம், ‘’லைட்டர் அல்லது தீப்பெட்டி இருக்குமா? ’’ என்று கேட்டார் சன்னி லியோன். ஆனால், குமாரிடமும் தீப்பெட்டி இல்லை ; பாலுவிடமும் தீப்பெட்டி இல்லை. 

 

இருவரிடமும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ்காரர்களிடம் ஓடோடிச் சென்றார் கேம்ப் குமார். ஒரு போலீஸ்காரரிடமிருந்து தீப்பெட்டியை வாங்கி கொண்டு வந்து சன்னி லியோனிடம் கொடுக்க, தீப்பெட்டியை வாங்கி சிகரெட்டை பற்ற வைத்தார் சன்னி லியோன். அத்துடன், தீப்பெட்டி வாங்கிக் கொடுத்த கேம்ப் குமாரிடம் 500 ரூபாய்கொடுத்து விட்டு காரில் பறந்தார் சன்னி.

 

ஒரு தீப்பெட்டிக்கு 500 ரூபாய் கொடுத்து வரவேற்பாளரை அதிர்ச்சியடைய வைத்தார் நடிகை சன்னி லியோன். அதேபோல, தீப்பெட்டிக்கு 500 ரூபாயா ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் அந்த சம்பவத்தை கவனித்திருந்த விமான நிலைய ஊழியரகள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தமிழில் ஒளிபரப்பாகும் சன்னி லியோனின் நிகழ்ச்சி 

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
sunny leone show will telecast in tamil

பாலிவுட்டில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒன்றான  ‘ஸ்ப்ளிட்ஸ் வில்லா’ நிகழ்ச்சி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிரபல நடிகை சன்னி லியோன் தொகுத்து வழங்குகிறார். நிகழ்ச்சியின் 15 வது சீஸனின் ‘எக்ஸ் ஸ்க்வீஸ் மீ ப்ளீஸ்’ என்ற அறிமுகப்பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை தனது புதிய இணை தொகுப்பாளர் நடிகர் தனுஜ் விர்வானியுடன் இணைந்து வெளியிட்டுள்ளார் சன்னி லியோன்.

இந்த வீடியோ பாடலை தனது சமூகவலைத்தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் சன்னி லியோன். ‘ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்’ நிகழ்ச்சியின் 15 வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுவரை இருந்த சீசன்களில் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் முதல் சீசன் இதுவே. ஸ்ப்ளிட்ஸ்வில்லாவின் இந்த சீசன் ஜியோ சினிமாவில் தமிழில் ஒளிபரப்படும்.