Skip to main content

சத்துணவு முட்டை கொள்முதல்....மூன்று மாதங்களில் புதிய டெண்டர்!

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

 

சத்துணவு முட்டை கொள்முதல் செய்ய பழைய முறைப்படி டெண்டர் கோர கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும்,  மூன்று மாதங்களில் புதிய டெண்டர் கோரப்படும் எனவும் தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான  சத்துணவு  முட்டை கொள்முதலுக்கான டெண்டர் காலம் 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. 

 

e

 

மாநில அளவில் டெண்டர் கோரப்பட்ட கொள்கையை மாற்றி, மண்டல அளவில் டெண்டர் கோருவது என 2018 ஆகஸ்ட் 20-ல் அரசாணை வெளியிடப்பட்டது.

 

இந்த அரசாணையின் அடிப்படையில், 50 லட்சம் முட்டைகள் கொள்முதல் செய்வத ற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. அதில் வெளிமாநில கோழி பண்ணைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதுடன், ஒரு லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யும் திறனும், டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள முட்டைகளில் 60 சதவீதம் சப்ளை செய்யும் தகுதியுடைய நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என தமிழக அரசு  நிபந்தனை விதித்தது.

 

இதை எதிர்த்து கோழி பண்ணைகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன், சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரையும்,  அரசாணையையும் ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.

 

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழுந்தைகள் வளர்ச்சி பணிகள் இயக்குனர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கார்த்திகேயன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மண்டல அளவில் முட்டை கொள்முதல் செய்யும் முயற்சி தோல்வியடைந்து விட்டதால், பழைய முறைப்படி, மாநில அளவில் டெண்டர் கோருவது என கொள்கை முடிவு  எடுக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாதங்களில் புதிய டெண்டர் கோரப்படும் எனவும் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.

 

இதை பதிவு செய்த நீதிபதிகள், புதிய டெண்டர் கோரும் வரை, தற்போது முட்டை சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்கள், அதே விலைக்கு தொடர்ந்து சப்ளை செய்ய அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பள்ளி மாணவர்களுக்கு 10 முட்டைகளுடன் உலர் பொருட்கள்-தமிழக அரசு உத்தரவு!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

Dry items with 10 eggs for school children - Tamil Nadu government orders

 

தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுவந்த நிலையில் ஜூன் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் நாளையே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு முட்டைகளுடன் கூடிய உலர் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது. சத்துணவு திட்டத்தின் கீழ் மே மாதத்திற்கு உலர் பொருட்களாக மாணவர்களுக்கு அரிசி, பருப்பு ஆகியவற்றுடன் பத்து முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் உலர்ப் பொருட்கள் சென்றடைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

 

 

Next Story

பள்ளி மாணவர்களுக்கு 10 முட்டைகளுடன் உலர் பொருட்கள்-தமிழக அரசு உத்தரவு!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

Dry items with 10 eggs for school children - Tamil Nadu government orders

 

தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுவந்த நிலையில் ஜூன் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் நாளையே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு முட்டைகளுடன் கூடிய உலர் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது. சத்துணவு திட்டத்தின் கீழ் மே மாதத்திற்கு உலர் பொருட்களாக மாணவர்களுக்கு அரிசி, பருப்பு ஆகியவற்றுடன் பத்து முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் உலர்ப் பொருட்கள் சென்றடைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.