Skip to main content

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை 

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

Bahujan Samaj Party demands action on the basis of the Supreme Court judgment

 

தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் வீடுகளையும் உடைமைகளையும் சூறையாடிய ஆதிக்க சாதியினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். 

 

திருவண்ணாமலை மாவட்டம், வீரலூர் கிராமத்தில் இறந்தவரின் உடலை பொதுப் பாதையில் கொண்டு செல்ல தாழ்த்தப்பட்ட மக்கள் அப்பகுதி ஆதிக்க சாதியினரிடம் கேட்டதற்காக, அவர்களின் சாதி பெயரைச் சொல்லி திட்டியபடி “எங்களிடம் வந்து கேட்கும் அளவிற்கு உங்களுக்கு தெம்பு வந்துவிட்டதா” என்று தாழ்த்தப்பட்ட மக்களைத் தாக்கியுள்ளனர். அதில் இத்தனை ஆண்டு காலமாக உழைத்து உருவாக்கிய அவர்களின் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நடுத்தெருவில் நிர்கதியாக நிற்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

 

Bahujan Samaj Party demands action on the basis of the Supreme Court judgment

 

இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், “முன்னதாக ஒரு வழக்கில், “கலவரத்துக்கான சூழல் உள்ளது என முன்கூட்டியே தெரிந்தும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் அமைதிகாக்கும் பட்சத்தில் அந்த மாவட்டத்தின் ஆட்சியரையும், காவல் கண்காணிப்பாளரையும் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும்” என நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜ் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் இச்சம்பவம் பற்றி முன்னரே அறிந்த காவல் மற்றும் மாவட்ட நிர்வாகத் தலைமையை இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை மாநில முதல்வர் நேரில் சந்தித்து நிவாரணம் வழங்குவதோடு உரிய நடவடிக்கையும் எடுக்கவேண்டும். அதே போல இந்தச் சம்பவத்தை இரண்டு சமூகங்களுக்கான சம்பவமாகக் கடந்து போகக்கூடாது. இது மனித சமூகத்திற்கு சீர்கேடு என்பதை அனைவரும் உணரவேண்டும். வன்கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இருந்தும், நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அநீதியை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் கூட்டணியமைத்து வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ரவுடிகளைக் கலையெடுக்கும் காவல்துறை சாதி வெறியர்களைக் கலையெடுக்க மறுப்பது ஏன்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.