Skip to main content

'தீபாவளி சிறப்பு பேருந்து' எந்தெந்த இடத்தில் இருந்து செல்கிறது தெரியுமா..?

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

தீபாவளி பண்டிகையையொட்டி பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அதனால் அவர்களுக்கு வசதியாக ஆண்டுதோறும் கூடுதல் பேருந்துகளைத் தமிழக போக்குவரத்துத் துறை சென்னையில் இருந்து இயக்கி வருகிறது. அதன்படி சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படும் எனவும், முன்பதிவு அடுத்த மாதம் 23ம் தேதி தொடங்குவதாகவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறப்புப் பேருந்துகளின் வழித்தடங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு,

கோயம்பேடு: மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ,திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள்.

மாதவரம்: ஆந்திர மாநிலத்திற்குச்  செல்லும் அனைத்து பேருந்துகள் .

பூவிருந்தவல்லி: ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் சானடோரியம்: விக்ரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.

கே.கே நகர்: ஈசிஆர் வழியாகப் புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
 

 

சார்ந்த செய்திகள்