Skip to main content

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!

Published on 09/02/2021 | Edited on 09/02/2021

 

At the District Collector's Office, people with disabilities engaged in a waiting struggle.

 

இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்தப் போராட்டத்தில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று அரசிடம் தொடர்ந்து தங்களுடைய கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை, மாதம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் 80 சதவீதத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 5,000 ரூபாய் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 

மேலும், தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ், 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்