Skip to main content

மருத்துவமனை பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை! தீவிர விசாரணை நடத்த கோரிக்கை!

Published on 18/06/2021 | Edited on 18/06/2021
ddd

 

சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துமனையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார் வெங்கடமதுபிரசாத். இவர் குறித்து 12.06.2021ஆம் தேதி அன்று தேசிய பெண்கள் பாதுகாப்பு ஆணையத்திற்கு ஒரு கடிதம் சென்றுள்ளது. 

 

அந்த கடிதத்தில், வெங்கடமதுபிரசாத் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டிடத்தின் உள்ளே உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் தங்கி வருதாகவும் அதே இ.எஸ்.ஐ மருத்துமனையில் பணிபுரியும் பெண்களிடம்  தவறான முறையில் பேசுவதுதாகவும், சட்டத்திற்கு புறம்பாக மருத்துவமனையில் பணிபுரியவர்களை தன்னுடைய குடியிருப்பில் பணிபுரிய வைப்பதுடன், இரவு நேரங்களில் அவர்களை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துவருவதாகவும் அந்த வகையில் வனிதா என்ற மருத்துவமனையில் பணிபுரிய வேண்டிய பெண்ணை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று பணிபுரிய வைக்கிறார்.

 

வனிதாவின் தந்தை பார்வை அற்றவர் என்பதால் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்றும், இது தொடர்பாக வேங்கடமதுபிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாரியம்மாள் என்பவர் ஆன்லைன் மூலமாக வழக்கு விண்ணப்பித்திருந்தார்.  


 
அந்த விண்ணப்பத்தின்படி சென்னை கீழ்பாக்கம் மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணையை தொடங்கினார். அந்த விசாரணையில் மாரியம்மாள் என்பவரும் வனிதா என்பவரும் இங்கு பணிபுரிவதாகவே தெரியவில்லை என்று காவல்துறை தெரிவிக்கிறது.

 

ஆனால் வனிதா, சுமித் காண்ட்ராக்ட் நிறுவனத்தின் மூலமாக சூப்பர் வைசராக பணிபுரிந்து வந்துள்ளார். அதற்கான வருகை பதிவும் உள்ளது. அதே இ.எஸ்.ஐ மருத்துவமனையில் விசாரித்தபோது, வேங்கடமதுபிரசாத் தங்களுடைய உடை பற்றியும், செயலைப் பற்றியும் ஆபாசமான வார்த்தைகளால் பேசுவார். அதேபோல மருத்துவமனையில் உள்ள அந்த குடியிருப்புக்கு இங்கு உள்ள பெண்கள் சென்று வருவார்கள்.

 

இந்த காரணத்தால் தான் இவரை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருக்கும் மத்திய அரசு குடியிருப்பில் தங்கக்கூடாது என ஆணையை பிறப்பித்துள்ளது. அதையும் மீறி இன்னும் அங்கே தொடர்ந்து தங்கிவருகிறார் என்றனர்.  

 

டாக்டர் வெங்கடமதுபிரசாத்திடம் இதுதொடர்பாக கேட்டபோது, இந்த பாலியல் தொல்லை பற்றி காவல்த்துறை விசாரிக்கிறது. அவர்களிடமே கேளுங்கள் என்றார். மேலும் பேசிய அவர், இ.எஸ்.ஐ குடியிருப்பை விட்டு வெளியில் செல்ல ஆர்டர் வந்தது உண்மைதான். இவர்கள் சொல்லுவதை போன்று நான் அங்கு தங்குவதே இல்லை. எப்போதாவது இரவு நேரங்களில் மட்டுமே அவசரத்திற்கு தங்குவேனே தவிர, மற்றபடி நான் அங்கு தங்குவதே இல்லை. வழக்கு தொடுத்த மரியம்மாள் என்பவர் வயதானவர். ஆனால் அந்த வழக்கை தொடுத்துள்ளார். அதே போல வனிதா எங்கள் மருத்துமனையில் பணிபுரிகிறாரே தவிர,  என்னிடத்தில் பணிக்கு வருவது என்பது பொய்யான தகவல். நான் பாலியல் தொந்தரவு கொடுப்பது என்பது வேண்டுமென்றே இட்டுகட்டுவது போல் உள்ளது என்றார்.  

 

வெங்கடமதுபிரசாத்திடம் விசாரித்தபோது எடுத்த எடுப்பிலே இதை காவல்துறை விசாரிக்கிறது, அவர்களிடமே கேளுங்கள் என்று சொன்னதோடு, அதனை தொடர்ந்து வனிதா, மரியம்மாள் ஆகியோர் இங்குதான் பணிபுரிகிறார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் விசாரணை நடத்திய போலீஸ் தரப்போ, வனிதா, மாரியம்மாள் என்பவர்கள் இங்கு பணிபுரியவே இல்லை என்றும், இருவேறு கருத்து சொல்லப்படுவதால் காவல்துறை துணைபோகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.   

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.