Skip to main content

தன்பாலின உறவு; பெண் எஞ்சினீயர் தற்கொலை முயற்சி

Published on 11/11/2022 | Edited on 11/11/2022

 

college student who was lesbian relationship with  female engineer

 

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவர், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயோடெக் படித்து வருகிறார். இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண்  என்ஜினீயர் ஒருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக ஒன்றாகவும் வாழ்ந்து வந்திருக்கின்றனர். 

 

இந்நிலையில், கல்லூரி மாணவியின் பெற்றோர் தனது மகளைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில், இறுதியாக மாணவி கோவையில் பெண் என்ஜினீயருடன் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

 

அதன்பிறகு இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், மாணவியுடன் இருந்த பெண்  என்ஜினீயர், மாணவி படித்து வரும் அதே கல்லூரியில்  என்ஜினீயரிங் படித்து வந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட, அருகருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் இருவரும் சகஜமாகப் பழக அவர்களுக்குள் நெருக்கம் ஏற்படவே தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறியுள்ளனர். அதன் பிறகு தனது படிப்பு முடிந்த பிறகு சீனியர் மாணவி கோவைக்கு வேலைக்கு சென்றதால் இருவரும் ஒன்றாகச் சந்திக்கும் நேரம் குறைந்திருக்கிறது. இதனிடையே இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்குத் தெரிய வர, மாணவியைக் கண்டித்துள்ளனர். இதனால் மாணவி வீட்டை விட்டு வெளியேறி பெண் என்ஜினீயருடன்  கோவையில் வசித்து வந்திருக்கிறார் எனத் தெரியவந்தது.

 

இதையடுத்து, இருவரும் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, போலீசார் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போது, பெண்  என்ஜினீயர்  தன்பாலின ஈர்ப்பாளர்கள் உறவில் ஈடுபட்டது தவறு என்று சொல்லியதாகச் சொல்லப்படுகிறது. பிறகு  திடீரென அங்குள்ள கழிப்பறைக்குச் சென்று கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அந்த பெண்ணிடம் பென்னாகரம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரவீனா சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றார்.

 

இதனிடையே, அந்த கல்லூரி மாணவிக்கு பெற்றோருடன் செல்லுமாறு போலீசார் கவுன்சிலிங் கொடுத்தனர். ஆனால் அதனை மறுத்த அந்த மாணவி, கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்த எங்களுக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது. எனக்கு எல்லாமே என் பெண் தோழிதான். காப்பகத்திற்கு வேண்டுமானால் செல்கிறேன். ஆனால், என் பெற்றோருடன் மட்டும் நான் சொல்ல மாட்டேன் எனக் கூற, அவரின் விருப்பப்படியே காப்பகத்திற்கு அனுப்பிவைத்தனர்.  இந்திய அரசியலமைப்பு சட்டம் 377 படி தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு  சேர்ந்து வாழ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

குடும்ப உறுப்பினர்கள் கழுத்தறுத்து கொலை; அரியர் வைத்திருந்ததைக் கண்டித்ததால் நிகழ்ந்த கொடூரம்

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
 The horrible incident happened because Ariar condemned what he had

சென்னை திருவொற்றியூரில் கல்லூரி படிப்பில் இளைஞர் ஒருவர் அதிகமாக அரியர் வைத்திருந்ததால் தாய் கண்டித்ததில் தாயையும், சகோதரனையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை திருவொற்றியூர் திருநகர் தெருவில் வசித்து வருபவர் பத்மா. இவர் அக்குபஞ்சர் தெரபிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார். பத்மாவின் கணவர் முருகன் கிரேன் ஆப்ரேட்டராக ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறார். பத்மா, முருகன் தம்பதிக்கு நித்தேஷ் (22), சஞ்சய் (14 ) என்று இரு மகன்கள் உள்ளனர். பிஎஸ்சி டேட்டா சயின்ஸ் படித்துள்ளார். சஞ்சய் திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று 11 மணியளவில் நித்தேஷ் அவருடைய பெரியம்மா மகள் மகாலட்சுமி என்பவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் 'நாங்கள் அனைவரும் வீட்டை விட்டு செல்கிறோம். எங்களுடைய வீட்டு சாவியை ஒரு பையில் போட்டு உங்கள் வீட்டு வாசலில் வைத்திருக்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார். அந்தக் குறுஞ்செய்தியை மகாலட்சுமி பார்க்காமல் விட்டுள்ளார். அடுத்தநாள் காலை எழுந்து செல்போனை பயன்படுத்திய பொழுது நித்தேஷ் அனுப்பிய குறுஞ்செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி, உடனடியாக வீட்டு வாசலுக்கு சென்றபோது குறுஞ்செய்தியில் நித்தேஷ் குறிப்பிட்டபடி வெளியே ஒரு பையும், அதில் சாவியும் இருந்தது.

 The horrible incident happened because Ariar condemned what he had

உடனே சாவியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்று வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி அக்கம் பக்கத்தினர், உதவியுடன் சென்று உள்ளே பார்த்த பொழுது பிளாஸ்டிக் பை ஒன்றில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் பத்மா மற்றும் இளைய மகன் சஞ்சய் ஆகிய இருவரும் சடலமாக கிடந்தனர். உடனடியாக இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸ் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் டேட்டா சயின்ஸ் படித்த நித்தேஷ் 14 அரியர் வைத்திருந்ததால் தாய் பத்மா அவரை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். அதேபோல் சகோதரன் சஞ்சையும் அரியர் வைத்திருப்பது தொடர்பாக அடிக்கடி சொல்லிக் காட்டியதால் ஆத்திரத்தில் இருந்த நித்தேஷ் இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

மேலும் கொலையை மறைப்பதற்காக இருவரது சடலங்களையும் பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டி வீட்டில் வைத்துவிட்டு சாவியை உறவினர் வீட்டின் முன்பு போட்டுவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நித்தேஷை போலீசார் தேடி வந்த நிலையில், நித்தேஷ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றதாகவும் ஆனால் இறுதியில் தற்கொலை செய்ய மனமின்றி சுற்றித்திரிந்த போது கைது செய்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக நித்தேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

நக்கீரனுக்குக் கிடைத்த வீடியோ ஆதாரம்; ஆபரேஷன் தியேட்டரில் ஆபாசம்; சிக்கிய மருத்துவர் சுப்பையா

Published on 15/06/2024 | Edited on 17/06/2024
Doctor Subbiah Shanmugam misbehaves with women in government hospital

நக்கீரன் அலுவலக முகவரிக்கு பெண் ஒருவரின் பெயரில், தலைநகரின் முக்கியப் பகுதியில் இருந்து ஒரு கொரியர் வந்தது. பிரித்து பார்த்த நமக்கு, அந்தக் கடிதம் இதயத் துடிப்பை அதிகரித்தது. அந்தக் கடிதத்துடன் ஒரு பெண் டிரைவும் இணைக்கப்பட்டிருந்தது. அதை சிஸ்டமில் போட்டுப் பார்த்தபோது, கடவுளாக மதிக்கும் மருத்துவர் ஒருவரின் செயல், நம்மை ஆட்டம்காண வைத்தது. அதுவும், மருத்துவமனைக்குள்ளே நடந்த அந்தச் சம்பவம் நம்மை நிலைகுலையச் செய்தது.

அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பின்வருமாறு, இந்த பெண்ட்ரைவில், டாக்டர் சுப்பையா ஷண்முகம் மற்றும் ஆபரேஷன் தியேட்டர் செவிலியர் ஆகியோர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் வளாகத்திற்குள், பாலியல் செயலில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்தச் செயலை அம்பலப்படுத்துவதன் நோக்கம் திரு.சுப்பையாவின் தொடர்ச்சியான பொருத்தமற்ற நடத்தையை வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதாகும். பின்வரும் காரணங்களுக்காக அவர் தண்டிக்கப்பட வேண்டும் என மூன்று காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

1. மருத்துவமனை அல்லது ஆபரேஷன் தியேட்டர் வளாகத்திற்குள், வேலை நேரத்தில் பாலியல் செயல் நிகழ்ந்ததால் அது தண்டனைக்குரியது. அவர், ஏழை புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை நடக்கும்போது மேற்பார்வையிடவோ அல்லது அறுவை சிகிச்சைகள் செய்யவோ வேண்டிய நேரத்தில், இதுபோன்ற செயலில் ஈடுபட்டது அவமானகரமானது.

2. மாணவர்களுக்கு கற்பிக்கும் அரசாங்க ஆசிரியராகவும், தேசிய மாணவர் அமைப்பில் ஒரு முக்கிய நபராகவும் இருப்பதால், அவரது தவறான செயல்கள் மாணவர்களுக்கு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும் அபாயமும் இருக்கின்றன.

3. அவர் தனது பெண் துணை ஊழியர்கள், முதுகலை மாணவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடமிருந்து, அதே பாலியல் சலுகைகளை எதிர்பார்க்கிறார். அவர் தனது அதிகாரத்தையும் அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி அவர்களை அச்சுறுத்துகிறார். சம்மதிக்க மறுப்பவர்கள் மறைமுகமாக சிக்கலை எதிர்கொள்கிறார்கள். தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர் மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார். தூய்மைப் பணியாளர்கள் முதல் உதவி பேராசிரியர்கள் வரை 16 முதல் 60 வயது வரையிலான அனைத்து பெண்களும் இவரால் பாலியல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்.

அவருக்கு அறநெறி குறித்து எந்தக் கவலையும் இல்லை. அவர் கண் வைத்துவிட்டால் எந்தப் பெண்ணும் பாதுகாப்பாக இருக்க முடியாது. பெண்கள் மற்றும் மனிதகுலத்தின் நலனுக்காக, அவர் தண்டிக்கப்பட வேண்டும். தார்மீக அடிப்படையில் அவர் அரசு மற்றும் மாணவர் அமைப்பிலிருந்து, அனைத்து பதவிகளிலிருந்தும் வெளியேற்றப்பட வேண்டும். ஊடகங்கள் தங்கள் கடமையை செய்யும் என நம்புவதாக" அந்தக் கடிதம் பல ரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

புற்றுநோய் நிபுணரான மருத்துவர் சுப்பையா சண்முகம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய்த்துறைத் தலைவராக பணியாற்றியவர். 2017 முதல் 2020 வரை ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் தேசியத் தலைவராக இருந்துள்ளார். இவருக்கும், அவர் வசிக்கும் குடியிருப்பில் இரண்டாம் தளத்தில் வசித்துவந்த மூதாட்டிக்கும் இடையே பார்க்கிங்கில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக, கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூலை மாதம் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மருத்துவர் சுப்பையா சண்முகம், மூதாட்டியின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான, சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அவர் மீது பெண்களைத் துன்புறுத்துதல், கரோனா விதிமீறல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் கைது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து.. திமுக அரசு பதிவியேற்ற பிறகு, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அதேபோல, முதலமைச்சர் வீடு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சென்று சந்தித்த மருத்துவர் சுப்பையா சண்முகம், கீழப்பாக்கம் புற்றுநோய் பிரிவு துறைத் தலைவர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய இந்தக் கடிதம் மற்றும் வீடியோ குறித்து மருத்துவர் சுப்பையா ஷண்முகத்திடம் நாம் தொடர்புகொண்டு பேசியபோது, "அது சித்தரிக்கப்பட்டது. அதுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. அனுப்பிய ஆள் யாரென்று விசாரித்து, முழு பின்னணியை விசாரித்து எழுதுவதுதான் பத்திரிகை தர்மம். நான் ஒழுங்கா வேலை பார்க்காட்டியும் திட்டுவேன். அதன்பொருட்டு என்னைப் பிடிக்காதவர்கள் எங்கேயாவது எதையாவது வீடியோ எடுத்து MORPH செய்து போட்டுவிடுகிறார்கள். முழு வீடியோ கிடைத்தால் சொல்லமுடியும் என்றார். அப்போது குறுக்கிட்ட நிரூபர், அந்த வீடியோ இரண்டு மணி நேரம் ஓடுகிறது. அதில் இருப்பது நீங்கள்தானே, அதேபோல சிறுநீர் கழித்த விவகாரத்திலும் உங்களது பெயர் அடிபட்டதே எனக் கேட்க, பதிலளித்த மருத்துவர் சுப்பையா ஷண்முகம், அதில் இருப்பது நான் கிடையாது. சிறுநீர் கழித்த விவகாரத்திலும் நான் சம்மந்தப்படவில்லை. நான் உங்களைப் பார்த்தது கிடையாது. வேண்டுமானால், நேரில் வாங்க பேசலாம்" என முடித்துக்கொண்டார்.