Skip to main content

விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுடன் பிடிப்பட்ட நபர்..! காவல்துறை விசாரணை..! 

Published on 29/04/2021 | Edited on 29/04/2021

 

Coimbatore Domestic Airport issue
                                                     மாதிரி படம் 


கரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவிவருகிறது. பல்வேறு இடங்களில் தொற்று பாதித்தவர்களை அனுமதிக்க மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாமலும், தொற்று பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் இல்லாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கரோனாவின் இந்த இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. சில மாநில அரசுகள் முழு ஊரடங்கையும், பல மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கையும் வார இறுதியில் முழு ஊரடங்கையும் நடைமுறைப்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் பணிபுரிந்துவரும் வட மாநிலத் தொழிலாளர்கள் பலர் கரோனா அச்சம் காரணமாகவும், முழு ஊரடங்கு அமலாகிவிடுமோ என்று அச்சத்தின் காரணமாகவும் தங்களது சொந்து ஊர்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். 

 

இந்நிலையில், நேற்று (28.04.2021) கோவையிலிருந்து டெல்லி செல்ல ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்த ஜோஹிந்தர் குமார் என்பவர் கோவை விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். நேற்று இரவு கோவை விமான நிலையத்திற்கு வந்தவருக்கு அடையாள அட்டை, பயணச் சீட்டு உள்ளிட்ட பரிசோதனைகள் நடந்திருக்கிறது. தொடர்ந்து ‘பை’ சோதனைக்குச் சென்றபோது, அவரது கைப்பையில் நான்கு துப்பாக்கிக் குண்டுகள் இருந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பரிசோதனை செய்யும் அதிகாரிகள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

 

தகவல் அறிந்து பிளமேடு காவல் நிலைய காவல்துறையினர் விமான நிலையம் வந்து, ஜோஹிந்தர் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர், ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதும், கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு பணி அதிகாரியாக இருப்பதும் தெரியவந்தது. மேலும், அவர் ஊருக்குச் செல்லும் அவசரத்தில் கைப்பையில் இருந்த துப்பாக்கிக் குண்டுகளை எடுத்து வைக்க மறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தன்னிடம் இருக்கும் துப்பாக்கிக்கு முறையான ஆவணங்களை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பீளமேடு காவல்துறையினர் அவரிடம் இருந்த துப்பாக்கியின் ஆவணங்களை சரிபார்த்தனர். அனைத்தும் முறையாக இருந்துள்ளது. தற்போது அவரிடம் மேல் விசராணை நடத்திவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.