Skip to main content

ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு கத்திக்குத்து

Published on 24/08/2022 | Edited on 24/08/2022

 

chennai local train women police incident police investigation

 

கடற்கரை ரயில் நிலையத்தில் பாதுகாப்புப்  படையைச் சேர்ந்த பெண் காவலரைக் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்ல கூடிய மின்சார ரயிலில் பெண்கள் அமரும் பெட்டியில், ஒருவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த பெண் காவலர், மதுபோதையில் இருந்த நபரைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், பெண் காவலரைச் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். 

 

இதில், படுகாயமடைந்த பெண் காவலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

சார்ந்த செய்திகள்