Skip to main content

நீட் - நாங்களும் உதவ தயார்: தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்... : பாரதிராஜா

Published on 05/05/2018 | Edited on 05/05/2018
Bharathiraja


பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருக்கும் ஏழை மாணவர்களுக்கான பயணத்திற்கு நாங்களும் உதவ தயாராக இருக்கிறோம் என்றும், தமிழ்நாட்டில் தொடர்ந்து திணிக்கப்பட்டு வரும் அசாதாரண சூழ்நிலையின் தொடர்ச்சியாக எங்கள் மாணவச் செல்வங்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலாக நீட் தேர்வு இருக்கிறது என்று இயக்குனர் பாரதிராஜா கூறி உள்ளார். 
 

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 

தமிழ்நாட்டில் தொடர்ந்து திணிக்கப்பட்டு வரும் அசாதாரண சூழ்நிலையின் தொடர்ச்சியாக எங்கள் மாணவச் செல்வங்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலாக நீட் தேர்வு இருக்கிறது. இன்று அந்தத் தேர்விலும் கூட எம்பிள்ளைகள் போட்டியிட்டு வெற்றிபெற்று விடக் கூடாது என்பதற்காக, தமிழ் நாட்டில் தேர்வு மையங்கள் அமைக்காமல் வெளி மாநிலங்களுக்கு அவசர கதியில் போய்ச்சேர வேண்டிய வன்மையான நிலையை உருவாக்கி இருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு.
 

இந்த இக்கட்டான சூழலை எம்பிள்ளைகள் மன வலிமையோடு எதிர்கொள்ள தயாரானாலும், தேர்வு மையத்தை நெருங்கிவிட முடியாத நிலையும் வலிந்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை எம் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எம் பிள்ளைகளின் உழைப்பும் முயற்சியும் கூட வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதே மைய அரசின் நோக்கம்.
 

எனவே தேர்வு எழுத அயல் மாநிலங்களுக்கு செல்லும் எம்மாணவ செல்வங்கள் தேர்வு மையத்துக்குசென்று தேர்வு எழுதி, தாயகம் திரும்புவதற்கான விமான பயண ஏற்பாட்டை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செய்து தருவதோடு எம்பிள்ளைகளின் பாதுகாப்புக்கும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
 

தனியார் சிலர் உதவிகள் செய்தாலும், அரசே தாமதிக்காது ஏற்பாடு செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியிருக்கும் ஏழை மாணவர்களுக்கான பயணத்திற்கு நாங்களும் உதவ தயாராக இருக்கிறோம். எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: 9884284853, 9884842929.
 

அவசரநிலை கருதி நாங்கள் இந்த ஏற்பாட்டில் பங்கு கொண்டாலும், என்றைக்கும் நீட் தேர்வை தமிழ்நாடு ஏற்காது.
 

கடந்த ஆண்டு நீட்டை எதிர்த்த தமிழ்நாட்டில், மையம் அமையுங்கள் என்று கேட்க வைத்ததன் மூலமாக பா.ஜனதா அரசின் நோக்கம் வெற்றி பெற்றுவிட்டதாக மத்தியில் இருப்பவர்கள் நினைத்தால் அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கப்போவது உறுதி. தமிழ்நாடு நீட்டை ஏற்று கொண்டது என்கிற பொய்த் தோற்றத்தை உருவாக்குகிற முயற்சியில் நீங்கள் தோற்கப் போவது உறுதி.
 

எங்கள் பிள்ளைகள் உள்ளம் சோர்ந்து விடாமல் இருக்கவே நாங்கள் இப்போது நீட் தேர்வு வி‌ஷயத்தை அற வழியில் கையாளுகிறோம். தேர்வுக்காக வெளிமாநிலம் செல்லும் எம்பிள்ளைகளுக்கு ஏதேனும் துயரங்கள் நேர்ந்தால் அங்கு இருப்பவர்கள் எதிர்வரும் காலத்தில் எதற்காகவும் தமிழ்நாட்டில் கால்வைக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.
 

இந்த நேரத்தில் கேரளாவுக்கு தேர்வு எழுத வரும் தமிழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு; குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
NEET exam question paper leak School owner arrested in Gujarat

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீட் முறைகேடு தொடர்ந்து எதிரொலித்து வரும் நிலையில் சிபிஐ விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் நீட் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஜெய் ஜலராம் பள்ளியின் உரிமையாளர் தீக்சித் படேலை சிபிஐ கைது செய்துள்ளது. இவரது பள்ளியில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஜார்க்கண்டில்  உள்ள பள்ளி ஒன்றின் முதல்வர் அசானுல் ஹக், அப்பள்ளியின் துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை சிபிஐ கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்” - இ.பி.எஸ்.!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
The voice of ADMK will keep ringing till the end of NEET 

தமிழக சட்டப் பேரவையில், நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.06.2024) உரையாற்றினார். மேலும், “இந்தத் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு பேசினர். அதனைத் தொடந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், பிறப்பித்துள்ள உத்தரவுகள், நீட் தேர்வு குறித்த முறைகேடுகள் தொடர் அம்பலம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பது, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கம், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு எனத் தொடர்ச்சியான நிகழ்வுகள் சொல்கின்ற செய்தி ஒன்று தான்- நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று!. 

The voice of ADMK will keep ringing till the end of NEET 

38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3 வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்?. இத்தீர்மானம் திமுக அரசின் மற்றுமொரு அரசியல் நாடகம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை மடைமாற்ற நினைக்கும் இதுபோன்ற பயனற்ற அரசியல் வித்தைகளை மக்கள் இனியும் நம்புவதாக இல்லை. நீட் தேர்வை பாராளுமன்றம் மூலம் மறுபரிசீலனை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை வருகின்ற பாராளுமன்றக் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய பாஜக கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியால் கடந்த 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என அனைத்துத் தளங்களிலும் தொடர்ச்சியான முன்னெடுப்புகளை மேற்கொண்ட ஒரே இயக்கம் என்ற அடிப்படையில், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுகவின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.