Skip to main content

பாஜக பிடியில் இருந்து அதிமுகவால் மீளவே முடியாது! முத்தரசன் தாக்கு!!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
AIADMK can never recover from BJP grip! Mutharasan attack

 

 

அதிமுகவில் எந்த முடிவாக இருந்தாலும் அதை மோடிதான் தீர்மானிப்பார் என்றும், பாஜக பிடியில் இருந்து இனி அதிமுகவால் மீளவே முடியாது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் வியாழக்கிழமை (ஆக. 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது,

 

“நாடு முழுவதும் கரோனா பாதிப்புக்குள்ளாக மத்திய பாஜக அரசுதான் காரணம். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவில் இருந்து பிற நாடுகளுக்கு கரோனா பரவும் அபாயம் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. அப்போதே இந்தியாவில் விமான போக்குவரத்தை தடை செய்திருந்தால் இந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

 

கரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி பாஜக அரசு, தனது ஆர்எஸ்எஸ், மனுதர்ம கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. மின்சார திருத்த சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்து, விவசாயிகளை பாதிப்படையச் செய்திருக்கிறது.

 

தமிழக முதல்வரும் மின்சார திருத்த சட்டத்தில் விதிவிலக்குதான் கேட்கிறாரே தவிர, ரத்து செய்யும்படி கோரவில்லை. தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக உடனே சட்டமன்றத்தை கூட்டி, சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

 

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது உதய் மின் திட்டம், நீட் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து வந்தார். இப்போது எடப்பாடி பழனிசாமி அரசு, தமி-ழக நலன்களையும் உரிமைகளையும் விட்டுக்கொடுத்து வருகிறது. பாஜக என்னும் பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையாக அதிமுக இருக்கிறது. இப்போது தலை மட்டும்தான் லேசாக தெரிகிறது. அதனால் இனி பாம்பின் வாயில் இருந்து மீள முடியாது.

 

திமுக தலைமையில் அமைந்துள்ளது மதச்சார்பற்ற கூட்டணி, கொள்கை ரீதியானது. எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 2 ஆண்டுக்கு முன்பே அறிவித்து விட்டோம். எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. மக்கள் பிரச்னைகளுக்காகவும், தமிழகத்தின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஒன்றிணைந்து போராடுகிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

 

திமுகவுக்கு பாஜக போட்டி என்பதும் பகல் கனவு. பாஜகவுடன் உள்ள கட்சிகளை மக்கள் நிராகரிப்பார்கள். அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி போன்றவர்களால் எல்லாம் அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்க முடியாது. அதிமுகவில் எந்த முடிவாக இருந்தாலும் அதை மோடிதான் தீர்மானிப்பார்.

 

வரும் 15ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவார். அடுத்த ஆகஸ்ட் 15ம் தேதி கோட்டையில் கொடி ஏற்ற மாட்டார். மக்கள் இ-பாஸ் நடைமுறையால் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். அதனால் இ&பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.