Skip to main content

ஒரு நிமிடத்தில் 24 தக்கல் டிக்கெட்டுகள்... மென்பொருளை பயன்படுத்தி ரயில் டிக்கெட் மோசடி... வடமாநில இளைஞர் கைது!!

Published on 30/06/2019 | Edited on 30/06/2019

தமிழகத்திலிருந்து இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் டிக்கெட்டுகளை கணினி மென்பொருளை பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் 24 தக்கல் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்று வந்த மோசடி  வடமாநில நபரை போலீசார் அதிரடியாக கைது செய்யதுள்ளனர்.

ticket


பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் செல்வதற்காக பயணிகள் முண்டியடித்துக்கொண்டு பேருந்தோ, ரயிலோ எப்படியேனும் சென்று விடுவதற்காக  டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது வழக்கமான ஒன்று. இப்படி முன்பதிவு செய்யும் வேலையை மூன்று மாதத்துக்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றனர் பயணிகள். இப்படி இருக்கையில் ஒரு மென்பொருளை பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் மோசடியாக 24 ரயில் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து அதன் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்து சம்பாரித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ticket ticket

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பை பை என்ற டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தீபக் என்பவர் போலீசாரிடம் சிக்கியது தனிக்கதை. சென்னையில் அமைந்துள்ள சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில்நிலைய பகுதிகளைவிட இவருடைய கடையில்தான் கூட்டம் அலைமோதும். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிரே சுமார் 20க்கும் மேற்பட்ட டிராவல்ஸ் நிறுவனங்கள் இயங்குகின்றன. அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களும் மற்றும் அவசரமாக ஊர் திரும்ப  நினைக்கும் வசதிபடைத்த பயணிகளை இவர்கள் இலக்காகக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

ticket


தட்கல் ரயில் டிக்கெட் வேண்டுமா உடனே அங்கு உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகினால் கிடைத்துவிடும். இதுபோன்று கடந்த ஒன்றரை வருடங்களாக முழு நேர வேலையாக செய்து வந்திருக்கிறார் தீபக். இது தொடர்பாக ரயில்வே எழும்பூர் ஊழல் கண்காணிப்பு பிரிவுக்கு புகார்கள் குவிந்ததால் கடந்த சனிக்கிழமை டிக்கெட் வாங்குவது போன்று பேச்சு கொடுத்து போலீசார் தீபக்கை சுற்றிவளைத்தனர்.

அங்கு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் ஆதாரங்களுடன் சிக்கியுள்ளன. ஏ எஸ் எம் எஸ் என்ற கணினி மென்பொருளை தனது லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள தீபக். அந்த மென்பொருளை பயன்படுத்த ஒரு குழுமத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு மொத்தம் 2500 ரூபாய் உறுப்பினர் கட்டணமாக செலுத்தி அந்த மென்பொருளை பயன்படுத்தி உள்ளார். இந்த மென்பொருளானது ஆன்லைனில் மோசடியாக அதிவேகத்தில் தட்கல் டிக்கெட்டுகளை இடைமறித்து முன்பதிவு செய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

 

ticket


டிக்கெட் கேட்டு வரும் பயணிகளிடம் டிக்கெட்டிற்கு உரிய கட்டணத்தை வசூலித்து கொண்டு விவரங்களையும் பெற்று விடுவார். தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே ரயில்வே இணையதளமான ஐஆர்சிடிசியில் அனைவரின் பெயருக்கும் தனித்தனியாக டிக்கட் போர்ட் தயார் செய்து வைத்துக் கொள்வார். முன்பதிவு தொடங்கிய ஒரு நிமிடத்தில் இவர் விண்ணப்பித்த பயணிகளுக்கு மட்டும் விரைவாக பயணச்சீட்டு ஒப்புதல் கிடைத்துவிடும். அந்த பயணச்சீட்டுகளை இரு மடங்கு விலைக்கு சம்பந்தப்பட்ட பயணிகளிடம் விற்பனை செய்து விடுவார். அந்த வகையில் இவர் அண்மையில் 5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 141 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

ticket


அவர் முன்பதிவு செய்து வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 14 பயணச்சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் அவரது நிறுவனத்தில் இருந்த முன்பதிவு செய்ய பயன்படுத்தி வந்த மடிக்கணினி, பிரிண்டர், மொபைல் போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தீபக்கை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.