Skip to main content

2021இல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்..! கல்வெட்டால் பரபரப்பு!!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

Chief Minister Edappadi in 2021, Deputy Chief Minister O.P.S.!  inscription issue !!

 

தேனி மாவட்டத்தில் சின்னமனூர் அருகே குச்சனூர் எனும் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் பிரசக்தி பெற்ற குச்சனூர் சனீஸ்வரர் கோவில் இருக்கிறது. இதே கிராமத்தில் காசி ஸ்ரீ அன்னபூரணி என்ற ஆலயமும் உள்ளது. இக்கோவில் நிர்வாகம் சார்பாக, கடந்த 30ஆம் தேதி கல்வெட்டு ஒன்று தயார் செய்யப்பட்டது. அதில் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது முறையாக வெற்றிபெற்று முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓபிஎஸ்சும் மே மாதம் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இக்கல்வெட்டு குறித்து தகவல் வந்ததை தொடர்ந்து, சின்னமனூர் காவல்துறையினர் கோவிலுக்கு வந்து கல்வெட்டை கைப்பற்றிச் சென்றனர். தற்போது இக்கல்வெட்டின் புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருவது மட்டுமல்லாமல், ‘வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே அதிமுக வெற்றி பெற்றுவிட்டதாக கல்வெட்டு வைத்துவிட்டார்களா? அதிலும் முதல்வர், துணை முதல்வர் என குறிப்பிடப்பட்டது கூட சரி; பதவியேற்கும் நாளையும் குறித்துவிட்டார்களே’ என விமர்சித்து வருகின்றனர்.

 

இந்த காசி ஸ்ரீ அன்னபூரணி கோவிலை நிர்வாகம் செய்து வருபவர் வேல்முருகன் என்பவரின் தந்தை. வேல்முருகன் என்பவர் தேனியில் தலைமை காவலராக பணிபுரிந்தவர். அதிமுக விஸ்வாசியான இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி காவலர் சீருடையில் கோவிலில் முடி காணிக்கை செலுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கண்டித்து காவல் சீருடையிலே போராட்டத்தில் ஈடுபட்டவர். 

 

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவந்த வேல்முருகனுக்கு கட்டாய விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது. அதற்குப் பின்னர் கோவில் நிர்வாகத்தை கவனித்தவர், ஜெயலலிதாவிற்கு சிலை வைத்து வழிபட போகிறேன் என கூறிவந்தார். பின்னர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி பெறுவதற்கு முன்பே நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் என இதே கோவிலில் கல்வெட்டு வைத்து சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும் என்ற அதீத நம்பிக்கையில் இவர் வைத்த கல்வெட்டின் புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.