Skip to main content

அதிமுகவில் இருந்து கே.சி.பழனிச்சாமி நீக்கப்பட்டது ஏன்?

Published on 16/03/2018 | Edited on 16/03/2018
kcp1

 

பிஜேபி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் . நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடிக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று அதிமுக செய்தித்தொடர்பாளர் கே.சி.பழனிச்சாமி  இன்று காலையில் பேட்டி அளித்தார். அதாவது, தெலுங்கு தேசம் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்குமார்? என்ற கேள்விக்கு காவிரி பிரச்சனையில் துரோகம் செய்வதால் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று பதில் அளித்தார் கேசிபி.

 

கேசிபியின் அளித்த இந்தப்பேட்டியால் பெரும் சர்ச்சை உருவானது.  இதையடுத்து கே.சி பழனிச்சாமி அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில்  இருந்து நீக்கப்படுகிறார் என்று ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்