Skip to main content

“கட்சியைத் தூக்க முடியாதவர்கள் பல்லக்கு தூக்க வந்தார்கள்..” - பாஜகவை சாடிய நாஞ்சில் சம்பத்! 

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

Nanjil Sampath comment BJP

 

திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் 99வது பிறந்த நாளை திமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் தொகுதி வாரியாக பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காட்டூர் பகுதி திமுக சார்பில் நடந்த கலைஞரின் 99வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளரும் 42 வது வார்டு கவுன்சிலருமான நீலமேகம் தலைமை வகித்தார். அதில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர்களும் கலந்துகொண்ட்னர். 

 

இந்தக் கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத், "டெல்லியில் ஆட்சியிலிருக்கும் திமிரில் இன்றைக்குச் சில ஆட்டுக்குட்டிகள் மிரட்டி கத்துகின்றன. வரலாற்று சிறப்புமிக்க குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சரைத் தரக்குறைவாக விமர்சிப்பதற்கெல்லாம் அஞ்சமாட்டோம். பயந்து அஞ்சி நடுங்கும் கட்சியல்ல திமுக. ஜனநாயக உச்சியின் சிகரமாய்த் திகழ்கிறார் முதல்வர் ஸ்டாலின். திருவாரூரில் ஓடாத ஆழித்தேரை ஓட வைத்தவர் கலைஞர். இதுபோன்ற எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்திய அவரது பெயரைச் சூட்டுவதற்கு எதிர்ப்பா? இதற்கெல்லாம் அஞ்சி பதுங்கும் கழகமல்ல திமுக. எந்தவொரு மிரட்டலையும் சவாலையும் திமுக சந்திக்கும். எதற்கும் எப்போதும் சமரசமாகாத கலைஞர் வழியிலேயே ஸ்டாலினும் நடைபோடுகிறார். இனியும் நடைபோடுவார். ஆனால், அவர் சமரசமாகிடுவார் என அவதூறு பரப்பி வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலினின் சிறப்பான ஆட்சியில் தமிழகம் இன்று பூந்தோட்டமாய்த் திகழ்கிறது. 


கல்லறை சென்ற தலைவர்களை இன்றைக்கு சனாதன கும்பல் கொச்சைப்படுத்தி வருவது என்ன நாகரிகம் என தெரியவில்லை. நபிகளை அவமதித்ததால் அந்நிய நாடுகளில் கண்டன போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். நம்மை மிரட்டிப் பார்ப்பவர்களுக்கு அஞ்சாமல் ஆட்சி செய்யும் ஸ்டாலினுக்கு உறுதுணையாய் திமுகவினரின் உழைப்பும், தீவிர கண்காணிப்பும் இனிதான் தேவை. பல்வேறு பிரச்சனைகள் சூழ்ந்த பள்ளிக் கல்வித்துறையைச் சிரமம் பாராது சிரித்தமுகத்துடனேயே செயல்படுத்துவது ஆச்சரியமே. ஆனால் அவரையும் கொச்சைப்படுத்தி வருகிறார்கள்.


கட்சியைத் தூக்க முடியாதவர்கள் பல்லக்கு தூக்க வந்தார்கள். இனி சும்மா இருக்க மாட்டோம். இனி திமுக சார்பில் பாசறை கூட்டங்கள் நடக்கும். கடந்த 77 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் தண்ணீர் திறந்தது ஸ்டாலினின் சிறந்த ஆட்சியில்தான். ஸ்டாலின் ஆட்சியைக் குறைகூற முடியாமல் பிரச்சனைகளைத் தேடி அலைகிறார்கள். ஒன்னேகால் வருடங்கள் போராடிய விவசாயிகளுக்கு எதிராக சட்டம் நிறைவேற்ற அதிமுக துணைபோனது. இந்திய அரசியலிலிருந்து இவர்கள்  வெளியேற்றப்பட வேண்டியவர்கள்" என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.