Skip to main content

முதல்வரின் டெல்லி பயணம் முதற்கட்ட சந்திப்பு நிறைவு  

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

mk stalin

 

பிரதமரையும், குடியரசுத் தலைவரையும் சந்திக்க தமிழக முதலமைச்சர் டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தில் முதற்கட்டமாக  குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை  டெல்லியில் அவரது இல்லத்தில் முதலமைச்சர் முக. ஸ்டாலின் சந்தித்தார்.

 

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற ஜெகதீப் தன்கருக்கு பூங்கொத்து வழங்கி முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.  முற்றிலும் மரியாதையை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது என சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

 

இந்த சந்திப்பிற்கு பின் நேரடியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க செல்கின்றார். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கவும், நீட் விளக்கு மசோதா போன்ற பல முக்கியமான மசோதாக்கள் நிலுவையில் இருப்பது குறித்தும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முழுமையான ஒப்புதல்களை வழங்க வேண்டி வலியுறுத்தியும்  மின்சார திருத்த சட்டங்கள்  போன்ற சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க  கூடாது என வலியுறுத்தவும்  இந்த சந்திப்பு நிகழ இருப்பதாக தெரிகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்