Skip to main content

“திமுக சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது..” - எல். முருகன் 

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

"DMK says one thing and does another." - L. Murugan

 

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “83 வருட பாரம்பரியமிக்க அகில இந்திய வானொலி நிலையத்தின் செயற்பாடுகள் விவசாயம், அரசியல், தேசியம், வெளிநாடு சம்பந்தமாக தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கிறது. பாரம்பரியமிக்க இந்த அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

 

பாரத பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்காக மிகப்பெரிய திட்டத்தைக் கொண்டுவந்தார். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் முன்னேறும் வகையிலும் அவர்களின் வேலைவாய்ப்புக்காகவும் சிறப்பு பொருளாதார பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டது. கடல்பாசி மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. கடல் பாசியை அதிகளவு ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். இலட்சத்தீவு சென்று அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்துள்ளோம். இந்த திட்டத்தால் பொருளாதாரம் அதிகம் வளரும். இந்தியாவில் கொச்சின், விசாகப்பட்டினம், சென்னை, மேற்கு வங்கம், பரதீப் ஆகிய ஐந்து இடங்களில் நவீன மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது.

 

மீனவர்களுக்கு மண்ணெண்ணெய், டீசல் உள்ளிட்டவற்றுக்கு மானியம் வழங்கிவருகிறோம். மீன்பிடி தொழிலுக்குப் பயன்படுத்தக் கூடிய எரிபொருளுக்கான கூடுதல் வரியை (Road cess) நீக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுகுறித்து நிதியமைச்சர் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளோம். மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக தமிழ்நாடு  மீனவர்கள் 600 பேருக்கு மேல் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின் ஒரு மீனவர் கூட சுட்டுக்கொல்லப்படவில்லை.

 

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் செய்ய முடியாததையெல்லாம் கூறினார்கள். பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என கூறினார்கள். ஆனால் அது வழங்கப்படவில்லை. திமுக சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.