Skip to main content

எடப்பாடியின் ராஜ தந்திரம்! பா.ஜ.க - ஓ.பி.எஸ்.சுக்கு செக்! 

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

Erode east constituency by election admk eps move

 

ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியிட ஜி.கே. வாசன் சம்மதம் தெரிவித்துவிட்டார். போட்டியிடுவது குறித்து எடப்பாடியிடம் வாசன் விவாதித்தபோது, "கூட்டணி தர்மத்தை மதித்து த.மா.கா.வுக்கு மீண்டும் வாய்ப்புத் தருகிறோம். அதே கூட்டணி தர்மத்தை மதித்து தேர்தல் செலவு முழுவதையும் நீங்கள்தான் ஏற்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் குறைந்தபட்சம் 10 கோடி செலவாகும்" என்று எடப்பாடி தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து ஈரோடு மாவட்ட த.மா.கா.வினரிடம் வாசன் ஆலோசித்ததில் யுவராஜா உட்பட யாருமே தேர்தல் செலவை ஏற்க முன்வரவில்லை. "கட்சியிலிருந்து உதவி செய்தால் போட்டியிடலாம்" என சொல்லிவிட்டதால் கோடிகளில் செலவு செய்ய த.மா.கா.வில் ஆள் இல்லை. அதனால், அதிமுகவே போட்டியிட சம்மதம் தெரிவித்திருக்கிறார் வாசன். த.மா.கா. தேர்தல் செலவை சுட்டிக்காட்டி, ஜி.கே.வாசனை அதிமுகவிற்கான ஆதரவு நிலையை எடுக்க வைத்ததும், பாஜக பக்கம் வாசன் செல்லாமல் தடுத்து நிறுத்தியதும்  எடப்பாடியின் ராஜ தந்திரமாகவே பார்க்கப்படுகிறது. 

 

இதன் மூலம் பா.ஜ.க. தனித்து போட்டியிடுவதும் கேள்விக்குறியாகியிருக்கிறது. இடைத்தேர்தலில் அதிமுக களமிறங்குவதால் ஓ.பி.எஸ்.சின் சூழ்ச்சியால்  இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும், கிடைக்கும் சின்னத்தில் போட்டியிட்டு அதிக அளவு வாக்குகளைப் பெற்று எடப்பாடி தலைமையிலான அதிமுக தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்கவும் எடப்பாடி தரப்பில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், என்ன செய்வது என்கிற குழப்பத்தில் ஓ.பி.எஸ். இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து 23ந் தேதி ஓ.பி.எஸ். கூட்டும் மா.செ.க்கள் கூட்டத்தில் ஒரு தெளிவு கிடைக்கும் என்கிறார்கள். 

 

ஒருவேளை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு, அப்போது பா.ஜ.க.வை ஓ.பி.எஸ். ஆதரித்தால் அவர் அ.தி.மு.க.வினராலேயே அந்நியப்பட்டுப் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. அதேசமயம், தேர்தலில் ஓ.பி.எஸ். ஒரு வேட்பாளரை களமிறக்கி அவர் குறைவாக ஓட்டுக்களை பெற்றால் அப்போது ஓ.பி.எஸ்.சின் இமேஜ் அதல பாதாளத்துக்கு செல்வதுடன் கட்சியிலிருந்து  முற்றிலும் ஒதுக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

 

ஈரோடு கிழக்கு தொகுதி,  கொங்கு மண்டல கோட்டை என்றாலும் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்காமல்  போகும் பட்சத்தில் எடப்பாடி தரப்பே அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது பொசிஷனுக்கு வருகிற நிலையில்,  'தாங்கள் தான் உண்மையான அதிமுக ' என்பதை நிரூபிக்க, இடைத்தேர்தலை  வாய்ப்பாக பயன்படுத்த நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

 

இதற்கிடையே,  பா.ஜ.க. தனித்துப்போட்டி என்கிற அண்ணாமலையின் அதிரடிக்கு  பா.ஜ.க.வின் டெல்லி மேலிடம் ஆதரவு தரவில்லை என்பதாகவும் செய்தி கசிகிறது. அதாவது, தனித்துப் போட்டி என்பது  அண்ணாமலையின் எண்ணம் மட்டுமே.  ஆகவே தனித்துப்போட்டி அறிவிப்பை அண்ணாமலை வாபஸ் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஒரு சூழல் உருவானால்,   ஓ.பி.எஸ். நிலை திரிசங்கு சொர்க்கம் தான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.