Skip to main content

களை கட்டியது ஈரோடு மண்டல திமுக மாநாடு! 2வது நாளிலும் லட்சக்கணக்கில் குவிந்த தொண்டர்கள்!

Published on 25/03/2018 | Edited on 25/03/2018
sta 1


ஈரோடு மண்டல திமுக., மாநாடு 24ம் தேதி ஈரோடு பெருந்துறை சரளை பகுதியில் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணாநகர், தந்தை பெரியார் திடலில் முதல்நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக துவங்கியது. இரண்டாம் நாளான இன்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திமுகவினர், லட்சக்கணக்கில் திரண்டனர்.

மாநாட்டையொட்டி மைசூர் அரண்மனையை போன்று பிரமாண்டமான முகப்பும், உட்புறம் இரண்டாவது முகப்பும் கட்சியினரை மட்டுமின்றி பார்வையாளர்களையும், பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்தது. இன்று ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட திமுக.,வினர் மாநாட்டை கண்டு ரசித்து வருகின்றனர்.
 

sta 2


மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வாகனங்களை நிறுத்துவதற்கு மட்டும் 435 ஏக்கர் நிலத்தில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

நேற்றும், கட்சியினர் பலரும் குடும்பம், குடும்பமாக மாநாட்டிற்கு வருகை தந்து இரவு மாநாட்டு பந்தலிலேயே தங்கி, இரண்டாம் நாளான இன்றும் மாநாட்டை கண்டு ரசித்து வருகின்றனர். முதல்நாளான நேற்று காலை திமுக தலைவர் கருணாநிதியின் வயதை நினைவு கூறும் வகையில் 95 அடி உயரமுள்ள கொடிகம்பத்தில் திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன் கொடியேற்றி வைத்தார்.
 

​  sta 2


இரண்டாம் நாளான இன்றும் பல்வேறு தலைப்புகளில் திமுக., தலைவர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினார். எழுச்சி மிகுந்த இந்த உரையை லட்சக்கணக்கில் திரண்டிருந்த தொண்டர்கள் கேட்டு ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.

இடையில் திடீரென செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி ஒழுங்காற்று வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரே எழுதி நிறைவேற்றிய தீர்மான நகலை முன்மொழிந்து பேசினார். இந்த தீர்மானத்தை வாசிக்க வரும் போது தொண்டர்கள் விண்ணை முட்டும் அளவிற்கு கரகோஷம் எழுப்பினர். தீர்மானத்தை முன்மொழிந்து வாசித்தப்பிறகு, இதை ஆமோதிக்கும் வகையில் கையை உயர்த்துமாறு தொண்டர்களை ஸ்டாலின் கேட்டு கொண்டார். இதையேற்று தொண்டர்கள் கையை உயர்த்தி, தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆமோதித்தனர்.
 

​  sta 2


மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று காலையில் இருந்தே கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான வாகனங்களில் திமுக.,வினர் அலை, அலையாய் மாநாட்டு பந்தலை நோக்கி வந்தனர். மாநாட்டு பந்தலில் நடந்த தலைவர்களின் எழுச்சி மிகு உரையை கேட்டு, கரகோஷம் எழுப்பியும், கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்களை வாழ்த்தியும் மாநாட்டில் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி மகிழ்ந்தனர்.

மாநாட்டு முகப்பில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் செல்பி எடுத்து அவற்றை வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு மகிழ்ந்தனர். இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் மாநாட்டு நிகழ்வில் வெளியூர்களில் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் அதிகளவில் கலந்து கொண்டதால் மாநாடு களை கட்டியது.

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.