Skip to main content

''அதிமுக எக்ஸ்பிரஸ் புறப்பட்டாச்சு... ஏறுகிறவர்கள் டெல்லிக்குப் போகலாம்...'' - அதிமுக செல்லூர் ராஜு பேட்டி 

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

 "The ADMK Express has left for Delhi... Those who are there can go to Delhi" - ADMK Sellur Raju interview

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,  ''இன்று தமிழக அரசு செயல்பாடுகள் மக்களுக்குத் திருப்தி இல்லாமல் இருக்கிறது. எங்களுடைய காலத்தில் அரிசி தரமாக இருந்தது. கொடுக்கப்பட்ட பொருட்கள் தரமாக இருந்தன. என்னுடைய பதவிக்காலத்தில் நான் எங்கேயும் போனதில்லை. என் குடும்பத்தையே நான் பார்த்ததில்லை. முழுக்க முழுக்க துறையே தான். ஏனென்றால் என்னிடத்தில் அந்தப் பதவியை ஜெயலலிதா கொடுக்கும்பொழுது என்னிடம் என்ன சொன்னார்கள் என்றால் ''ராஜு நம்முடைய அரசுக்கு நல்ல பெயர், நமக்கும் கட்சிக்கும் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்றால் உங்கள் துறையில்தான் இருக்கிறது. இந்த துறையில் வேறு ஏதும் கிடைக்காது என்றாலும் மக்களுக்கு சேவையாற்றுகின்ற ஒரு அருமையான துறை. இந்த துறையின் மூலம் நீங்கள் கொடுக்கின்ற செயல் திட்டத்தின் மூலமாகத்தான் நமது அரசுக்கும், நம்முடைய கட்சிக்கும் பேர் கிடைக்கும். எனவே உங்களை நம்பி இந்தத் துறையை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இதை நீங்கள் சிறப்பாகச் செய்வீர்கள்'' என்று சொன்னார்.

 

அதனடிப்படையில் மாதந்தோறும் ஆய்வுகள் செய்வோம். கரோனா காலத்தில் எடப்பாடி பழனிசாமி பத்து மாதங்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களின் பொருளாதார சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்த சிரமமும் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் முதலில் ஆயிரம் ரூபாய் கிராமங்களில் வழங்கினார். நகரப்புறங்களில் 2000 ரூபாய் வழங்கினார். இது முழுக்க முழுக்க முழுக்க யாரும் இழக்காத அளவிற்கு, யாரும் விடுபடாத அளவிற்கு வழங்கப்பட்டது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு என்பது ஆய்வுக்கு உட்பட்டது. ஆய்வு செய்துதான் இதில் முடிவு எடுக்க வேண்டும். ஆய்வு செய்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. என்ன என்பதை எதிர்காலத்தில் பார்ப்போம்'' என்றார்.

 

அப்பொழுது தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு,  ''அண்ணா திராவிட முன்னேற்றக் கழக எக்ஸ்பிரஸ் டெல்லியை நோக்கிப் புறப்பட்டு விட்டது. இதில் ஏறுகிறவர்கள் டெல்லிக்குப் போகலாம். இதில் ஏறாதவர்கள் அவரவர்கள் ஊரிலேயே இருக்கலாம். என்றும் அதிமுக தான் கூட்டணியில் தலைமை ஏற்கும். இது இன்றல்ல நேற்றல்ல தந்தை பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா எனத் தொடர்ந்து இப்படித்தான் நடக்கிறது. எங்களை நம்பி வருபவர்களை நாங்கள் கை தூக்கி விடுவோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.