Skip to main content

பெண்களை சபரிமலை படி வரை அழைத்து சென்றதற்காக கண்ணீர் வடித்த போலீஸ் ஐஜி

Published on 23/10/2018 | Edited on 23/10/2018

சபாிமலையில் இரண்டு இளம் பெண்களை 18-ஆம் படி முன் வரை அழைத்து சென்ற போலீஸ் ஐஜி ஸ்ரீஜித் அய்யப்ப சாமி முன் நின்று கண்ணீா் வடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சபாிமலையில்  ஐப்பசி மாத  பூஜைக்காக 5 நாட்கள் நடை திறப்புக்கு பிறகு நேற்று இரவு நடை பூட்டப்பட்டது. இதில் 20-ம் தேதி அய்யப்ப பக்தா்கள் மற்றும் இந்து அமைப்புகளின் எதிா்ப்பை மீறி கொச்சியை சோ்ந்த ரெஹான பாத்திமா மற்றும் ஆந்திராவை சோ்ந்த கவிதா என்ற இரண்டு இளம் பெண்கள் சபாிமலைக்கு செல்வதாக கூறி சென்றனா். 

 

SAPARIMALAI

 

இந்த பெண்களை அங்கு பாதுாப்பு பணியில் இருந்த ஐஜி ஸ்ரீஜித் பாதுகாப்பாக அழைத்து சென்றதோடு அவா்களுக்கு போலீஸ் உடை மற்றும் போலீஸ் ஹெல்மெட்டையும் கொடுத்து பாதுகாப்போடு அய்யப்பனை தாிசிக்க அழைத்து சென்றாா். 

 

சன்னிதானத்தில் 18-ஆம் படிக்கு முன் 50 மீட்டா் தூரத்தில் பக்தா்கள் எதிா்ப்பு தொிவித்து அந்த பெண்களை தடுத்து நிறுத்தியதோடு ஐஜியிடமும் பக்தா்கள் எதிா்ப்பை காட்டினாா்கள். அப்போது ஐஜி ஸ்ரீஜித் நானும் அய்யப்பன் விசுவாசிதான் இது என்னுடைய டூட்டி என்று கூறிய போதும் பக்தா்கள் மற்றும் தந்திாிகளின் எதிா்ப்பால் அந்த இளம் பெண்கள் திருப்பி அனுப்பபட்டனா்.

 

saparimala

 

இந்த நிலையில் நேற்று சபாிமலை நடைபூட்டுவதற்கு  ஐஜி ஸ்ரீஜித் முன் அய்யப்பனின் எதிரே நின்று கண்ணீா் விட்டு கதறினாா். உச்சநீதி மன்றத்தின் தீா்ப்பு படி அரசு மற்றும் தேவசம் போா்டின் நிா்ப்பந்தத்தால் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு கண்கலங்கினாா். இதை பாா்த்த போலிசாா், தேவசம் போா்டு அதிகாாிகள் மற்றும் தந்திாிகள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பொன்னம்பலமேட்டில் ஏறிய மகர ஜோதி; சரண கோஷமிட்ட பக்தர்கள் 

Published on 15/01/2024 | Edited on 15/01/2024
Makara Jothi ascended at Ponnambalamed; Devotees chanting

கேரள மாநிலம் சபரிமலையில் இன்று ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் அதிகப்படியாக குவிந்துள்ளனர்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதலே ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு விரதம் இருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அண்மையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதனால் அதிக நேரம் காக்க வைக்கப்பட்ட பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவங்களும் நிகழ்ந்து இருந்தது. அதனைத் தொடர்ந்து கேரள அரசும் சபரிமலை கோவில் தேவஸ்தானமும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்பன் சிலைக்கு தங்க ஆபரணம் அணிவிக்கப்பட்டு மகரஜோதி ஏற்றப்பட உள்ளது. இதன் காரணமாக அங்கு அதிகப்படியான பக்தர்கள் மகரஜோதி தரிசனம் காண குவிந்தனர்.

தற்போது பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி ஏற்றப்பட்ட நிலையில் பக்தர்கள் 'சரணம் ஐயப்பா... சரணம் ஐயப்பா...' என விண்ணதிர  கோஷம் எழுப்பினர்.