Skip to main content

சீன அதிபரை கண்டு மோடி பயப்படுகிறார்- ராகுல் காந்தி...

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

 

rahul

 

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சியாக ஐநா சபையில் பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட பல உலக நாடுகளும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கண்டு மோடி அச்சப்படுவதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி தனது ட்விட்டரில், “ பலவீனமான மோடி ஜி ஜின்பிங்கை பார்த்து பயப்படுகிறார். இந்தியாவிற்கு எதிரான சீனாவின் நடவடிக்கை பற்றி ஒரு வார்த்தை கூட அவரது வாயில் இருந்து வரவில்லை" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்