Skip to main content

குடியரசு தலைவருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட மத்திய அமைச்சர்கள்!

Published on 07/07/2021 | Edited on 07/07/2021

 

 

president of india ramnath kovind union ministers take group photo

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் புதிய மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு விழா இன்று (07/07/2021) மாலை 06.00 மணிக்கு நடைபெற்றது. இதில், 43 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

 

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநயாகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள்  உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

 

பின்னர், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் புதிதாக பதவியேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணையமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்