Skip to main content

ஆந்திர முதல்வருக்கு ரோஜா தந்த ஸ்பெஷல் கிப்ட்!

Published on 14/12/2019 | Edited on 14/12/2019

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெலுங்கானாவை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் நான்கு நபர்களால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரிக்கப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நநிலையில், பாலியல் குற்றச்சாட்டு உள்ளானவர்கள் விசாரிக்கப்பட்டு, 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வழி செய்யும் சட்டத்தினை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்தார். இந்த மசோதாவிற்கு ஆந்திர அமைச்சரவையும் ஒப்பதல் அளித்தது. இதன் மூலம் ஆந்திர மாநிலம் இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியான மாநிலம் என்ற பெயரை பெற்றது.
 

gkh



இதனை வரவேற்றுள்ள ஆந்திர மாநில பெண் எம்.எல்.ஏக்கள் நேற்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், இன்று நடிகையும் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா ஜெகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவருக்கு திலகமிட்டு, ராக்கி கயிறு கட்டி ரோஜா மகிழ்ந்தார். 

 

சார்ந்த செய்திகள்