Skip to main content

குறையாத நோய்த் தொற்று... தொடரும் உயிரிழப்பு - திணறும் மகாராஷ்டிரா!

Published on 16/03/2021 | Edited on 16/03/2021

 

jh


உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 


இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மராட்டியத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வந்தது. நேற்று 15,216 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 16,602 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,82,833 ஆக அதிகரித்துள்ளது. 1,10,321 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும், இன்று 92 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 52,723 பேர் கரோனா தொற்றால் மொத்தமாக மரணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 7,326 பேர் கரோனா தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 21,17,374 ஆக உயர்ந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்