Skip to main content

நரபலியும்; மசாலா தடவிய மனித மாமிசமும்...! நான்கு வயது குழந்தையைக் கொன்ற கொடூரம்

Published on 19/10/2022 | Edited on 19/10/2022

 

Kerala two woman passed away case

 

கேரளாவில் நடக்கும் நரபலி சம்பவங்கள் திடீரென்று தற்போது முளைத்து விடவில்லை 1973களிலேயே அது துளிர் விட்டிருக்கிறது என்கிறார்கள் கொல்லம் நகர் பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள்.

 

கொச்சியை சேர்ந்த மந்திரவாதி முகம்மது ஷாபி. பில்லி, சூனியம் வைப்பு எடுப்பு மூலமாக குடும்ப சாபத்தைப் போக்க வைப்பது போன்றவைகளை மாந்திரீகத்தின் மூலமாக மக்களை வசியப்படுத்தி பணம் பார்த்து வந்திருக்கிறார். மக்களை வசியப்படுத்துகிற வித்தையறிந்த முகம்மது ஷாபி, ஸ்ரீதேவி என்ற பெண் பெயரில் போலி பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி அதன் மூலம் குடும்ப சாபம் விலக, வருமானம் பெருகி செல்வம் கொழிக்க, வியாபாரம் விருத்தியடைய என்று கவர்ச்சியான வசீகரப் பேச்சுகளின் மூலம் வீசிய வலையில் சிக்கியவர் தான் லைலா.

 

 

Kerala two woman passed away case

 

நாட்டு மருந்துகளுடன் அலோபதி மாத்திரைகளையும் கலந்து மசாஜ், உடம்பு வலி போக்குதல் என்ற இரண்டாம் ரக வைத்தியங்களைச் செய்து வந்த பகவல்சிங் ஒரு அரசியல் கட்சியிலுமிருக்கிறார். கணவனின் வைத்தியத்தில் போதுமான வருமானம் கிடைக்காமல் போகவே குறுக்கு வழியில் பணம் தேடுகிற சிந்தனையிலிருந்த லைலாவுக்கு மந்திரவாதி முகம்மது ஷாபியின் தொடர்பு கிடைக்க, வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவர், லைலாவுடன் நெருங்கிய தொடர்பையும் வைத்துக் கொண்டுள்ளார். பின்னர் பகவல்சிங்குடன் அறிமுகமான மும்மது ஷாபி, அவர்களிடம் நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என ஆசை வார்த்தை காட்டி பகவல்சிங்கிடம் வெயிட்டான தொகையைப் பெற்றுக் கொண்டு, பலி கொடுப்பதற்கு வயிற்றுப்பாட்டிற்காக ஆதரவற்ற லாட்டரி டிக்கெட் விற்கிற பெண்களின் மீதான பார்வையைத் திருப்பியிருக்கிறார். ஆலுவா பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்றுக் கொண்டிருந்த ரோஸ்லின் என்ற பெண்ணை பணத்தாசை காட்டி அழைத்து வந்து ஈவு இரக்கமற்ற வகையில் கொடூரத்தனமாக அறுத்துக் கொன்று குரளி பூஜை, கடவுளைத் திருப்தி செய்ய, செல்வம் பெருக என்ற பசப்பு வார்த்தைகளால், யாகத்திற்குப் பின்பு புனித நீரை வீடு முழுக்கத் தெளிக்கிறதைப் போன்று நரபலி கொடுத்த அறை முழுக்க அந்தப் பெண்ணின் மார்பகத்தை அறுத்தெடுத்து பீறிட்ட சூடான ரத்தத்தைத் தெளித்திருக்கிறார்.

 

முதல் நரபலிக்குப் பின்பு சொன்னது நடக்கவில்லை. செல்வம் பெருகவில்லையே என்ற பகவல்சிங்கிடம், குடும்பத்தில் சாபமிருக்கு. முழுசா தீரணும். அதுக்கு இன்னொரு நரபலி கொடுக்கணும் என்ற முகம்மது ஷாபி, அதற்காக முந்தைய தேடலைப் போன்றே பிழைப்பிற்காக அங்கே லாட்டரி சீட் விற்ற தர்மபுரியைச் சேர்ந்த பத்மாவை ஆசை வார்த்தை சொல்லி கூட்டி வந்து துடிக்கத் துடிக்க நரபலியைக் கர்ண கொடூரமாக நடத்தியிருக்கிறார்கள். அறை முழுக்க அந்த அப்பாவிப் பெண்ணின் ரத்த அபிஷேகம் நடத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து ரோஸ்லின் உடலை 40 துண்டுகளாக வெட்டிப் புதைத்ததைப் போன்றே பத்மாவின் உடலை 56 துண்டுகளாக வெட்டி உப்புக் கண்டம் போட்டிருக்கிறார்கள்.

 

 

Kerala two woman passed away case

 

முதல் நரபலியில் சாபம் முழுசா தீரலை. இப்ப சாபம் விலகி செல்வம் பெருகணும்னா, சாமிக்குப் படைத்த நரமாமிசத்தை இரண்டு பேரும் சாப்பிடணும், என்று சொன்னபோது தம்பதியர் யோசித்திருக்கிறார்கள். கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று  கூசாமல் மந்திரவாதி ஷாபி சொன்னதைக் கேட்டு தம்பதியரான பகவல்சிங்கும் லைலாவும் உப்புக் கண்டம் போட்ட மனித மாமிசத்தை மசாலாவாக்கி சமைத்துச் சாப்பிட்ட கொடூரமும் நடந்தேறியிருக்கிறதாம்.

 

இரண்டு நரபலி சம்பவங்களும் அடுத்தடுத்த கால அவகாசத்தில் நடந்தாலும், ரோஸ்லினைக் காணவில்லை என உத்திரப்பிரதேசத்திலிருந்து வந்த அவரது மகள் மஞ்சு கொடுத்த புகாரில் காலடி காவல் நிலைய போலீசாரின் புலன் விசாரணையில் முன்னேற்றமில்லை. பின்னர் பத்மாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட போலீசாருக்கு, பத்மாவை முகம்மது ஷாபி காரில் அழைத்துச் செல்கிற சி.சி.டி.வி.காட்சி கிடைக்கவே அதன் மூலம் இரண்டு நரபலி சம்பவங்களும் வெளிவந்து கேரளாவைப் பதற அடித்திருக்கின்றன.

 

Kerala two woman passed away case

 

சம்பவத்திற்குப் பின்பும் மந்திரவாதி முகம்மது ஷாபியும், லைலாவும் வழக்கம் போல் எந்தவித பதற்றமும் சலனமுமில்லாமல் நெருக்கமாக இருந்திருக்கிறார்களாம். உழன்று கொண்டிருந்த பகவல்சிங் விஷயத்தை வெளிப்படுத்தி விடுவார். மாட்டிக் கொள்வோம் என்று இருவரும் பதறியிருக்கிறார்கள். அதற்கு நேரம் வைக்காமல் பகவல்சிங்கை போட்டுத்தள்ளிவிட வேண்டும் என்று மந்திரவாதி முகம்மது ஷாபியும் லைலாவும் திட்டம் போட்டிருக்கும் சமயத்தில்தான் போலீசிடம் மொத்தமாய் அனைவரும் சிக்கியிருக்கின்றனர். இதனால் மூன்றாவது நரபலியும் தடுக்கப்பட்டிருக்கிறதாம்.

 

Kerala two woman passed away case

 

கேரளாவில் நரபலிகள் நடப்பது இது முதல் சம்பவமல்ல, என்று விவரிக்கிற சமூக நல ஆர்வலர்களோ, 1967ன் போது கேரள மாநிலம் அமைக்கப்பட்டது. 1973களில் கொல்லம் நகரின் மத்தியப் பகுதியில் அழகேசன் என்பவர் வெளி ஏரியாவிற்குச் சென்று சாமியாராக மாறி ஊர் திரும்பியிருக்கிறார். தன் வீட்டின் முன்னே சாமி பீடத்தை அமைத்து சிறிய குடில் போட்ட அழகேசன் அதற்கு பூஜை புனஸ்காரங்களைச் செய்யத் தொடங்கியதோடு, ஜோசியம், பில்லி, சூனியம் எடுப்பு, வசியமாக்குதல், அருள்வாக்கு என்று அப்பாவி மக்களை வசீகரப்படுத்தி பிழைப்பை ஓட்டி வந்திருக்கிறார்.

 

தன் சாமியார் தொழிலில் அடுத்த கட்டத்திற்கு நகர விரும்பிய அழகேசன் தனக்கு சக்தி கிடைக்கவும், அதற்காக கடவுளைத் திருப்தி செய்ய நரபலி கொடுப்பதற்கான ஏற்பாட்டில் இறங்கியிருக்கிறார். நரபலி கொடுப்பதற்காக தன் வீட்டின் முன்புற பக்கமுள்ள வீட்டின் 4 வயது தலைச்சன் குழந்தையான தேவதாசனை யாருக்கும் தெரியாமல் அழைத்து வந்து நடுப்பகல் சூரியன் மத்திக்கு வருகிற நேரத்தில் கழுத்தையறுத்து நரபலி கொடுத்து, குழந்தையின் ரத்தத்தை சாமி சிலையில் அபிஷேகம் செய்து, குடிசை முழுக்க ரத்தத்தைத் தெளித்திருக்கிறானாம். பின்னர் குழந்தை தேவதாசனின் உடலை தன் வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டு, அந்த இடத்தை மறைப்பதற்காக வாழைக் கன்றுகளையும் நட்டிருக்கிறார்.

 

Kerala two woman passed away case

 

இதற்குள் குழந்தை தேவதாசனைக் காணாமல் தவித்த அவனது பெற்றோர்கள் போலீசில் புகார் செய்திருக்கிறார்கள். விசாரணையில் முன்னேற்றமில்லையாம். அதே சமயம் சாமியார் அழகேசன் சலனமேயில்லாமல் தொழிலை மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சாமியார் அழகேசனின் வீட்டின் பின் பக்கம் வாழைக்கன்று திடீரென்று ஊன்றப்பட்ட தகவல் போலீஸ் வரை போக, சந்தேகத்தின் அடிப்படையில் அவரைத் தீவிரமாகப் போலீஸ் விசாரித்தபோது தான், குழந்தை தேவதாசன் நரபலி கொடுக்கப்பட்டது வெளியே தெரியவந்து மக்களைப் பதற அடித்திருக்கிறது. விரைவாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் தீர்ப்பின்படி சாமியார் அழகேசன் தூக்கிலிடப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.

 

பில்லி, சூனியம், செய்வினை, செல்வம் பெருக ஏமாறுபவர்கள் இருக்கிற வரையில் ஏமாற்றுபவர்களின் தொழிலில் பசுமை தான்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.