Skip to main content

இன்று தாக்கலாகிறது இடைக்கால பட்ஜெட்; நிதியமைச்சர் அருண் ஜெட்லி பங்கேற்கவில்லை...

Published on 01/02/2019 | Edited on 01/02/2019

 

gfbfgbf

 

மத்திய பாஜக அரசு இன்று தனது இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. ஆண்டு தோறும் முழுமையான பட்ஜெட் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். அது அல்லாமல் இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி முழு பட்ஜெட் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சரி இல்லாததால் சிகிச்சையில் உள்ள நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு விவசாயிகள் மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் கடிதம்!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

 Tamil Nadu Chief Minister's letter to Piyush Goyal!

 

பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

 

நூல் விலையைக் குறைக்கக்கோரி ஜவுளித் தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நூல் விலையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்தக் கோரி மத்திய  ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.  ஊக வணிகத்தை தவிர்க்க ஏதுவாக விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும். குறைந்தபட்சம் 500 பருத்தி பேரல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதி நிபந்தனையைச் சீரமைக்க வேண்டும் என கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.

 

 

Next Story

பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நிதித்துறைச் செயலாளர் விளக்கம்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

tn assembly interium budget 2021 finance secretary pressmeet

 

சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (23/02/2021) காலை 11.00 மணிக்கு சட்டப்பேரவையின் கூட்டம் கூடியது. அதைத் தொடர்ந்து, 2021 - 2022 ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். 

 

இதனிடையே, சென்னை தலைமைச் செயலகத்தில் இடைக்கால பட்ஜெட் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த தமிழக நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன், "தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 2.02% ஆக இருக்கும். தமிழகத்தின் வருவாய் 18% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நேர்மறையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் வருவாய் குறைந்து, கூடுதல் செலவு ஏற்பட்டதால் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் அரசின் கடன் வாங்கும் அளவு குறையும். நடப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, புதிய வரி ஏதும் விதிக்காமல் வருவாய் கணக்கீடு இருக்கும். தமிழக அரசின் கடன் வாங்கும் அளவு மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட அளவிற்குள் கட்டுக்குள் இருக்கிறது. மாநிலத்தின் மொத்தக் கடனானது 15- வது நிதிக்குழு அளித்த குறியீட்டிற்குள்தான் உள்ளது. கடன் வாங்குவதில், ஜிடிபி மற்றும் 15 வது நிதிக்குழு அளித்த வரம்பை தமிழகம் மீறவில்லை. 

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரி விதிப்பு காரணம் அல்ல. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியதே, விலை உயர காரணம். மக்களுக்கு சாதகமாக இருக்கும் முறையிலேயே கடந்த ஆண்டு வரியை மாற்றியமைத்தோம். 2020 - 2021 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ரூபாய் 30,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடிக்கான எஞ்சிய ரூபாய் 7,000 கோடி நிதி, வரும் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்படும். ஏற்கனவே உள்ள ஆசிரியர்களைக் கொண்டு 6 முதல் 10- ஆம் வகுப்பு வரை கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படும். 2021 - 2022 இல் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூபாய் 35,668 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.