Skip to main content

அடுத்தடுத்து கொல்லப்படும் பண்டிட்கள்: உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் அமித்ஷா ஆலோசனை

Published on 03/06/2022 | Edited on 03/06/2022

 

Amit Shah begins high-level security review meeting on Jammu and Kashmir

 

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு சூழல் குறித்து உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

 

ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில், அங்கு நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்ய அமித் ஷா தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. உள்துறை அமைச்சகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் என்.எஸ்.ஏ அஜித் தோவல், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா, ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, சிஆர்பிஎஃப் தலைவர் குல்தீப் சிங், எல்லை பாதுகாப்பு படை தலைவர் பங்கஜ் சிங், ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்