Skip to main content

நாடு முழுவதும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை!

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

நாடு முழுவதும் 150- க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று மாலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

டெல்லி, ஜெய்ப்பூர், ஜோத்பூர், கவுகாத்தி,ஸ்ரீநகர், ஷில்லாங், சண்டிகர், சிம்லா, சென்னை, மதுரை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, புனே, காந்திநகர், போபால், ஜபல்பூர், நாக்பூர், பாட்னா, ராஞ்சி, காசியாபாத், லக்னோ, டேராடூன் ஆகிய 150 க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

 

ALL OVER INDIA CBI 150 ABOVE PLACES RAID YESTERDAY START


நாட்டிலுள்ள அரசு அலுவலகங்களில் ஊழல் மிகுந்துள்ளதாக சி.பி.ஐ.க்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து, மக்கள் அதிகம் நாடும் அரசு அலுவலகங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரை அடுத்து, அங்கு சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 


 

சார்ந்த செய்திகள்