குஜராத் மாநிலம், வதோதராவில் விமானம் சார்ந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து ஏர்பஸ் 320 ரக விமானத்தை வாங்கிவந்து, இந்த உணவகத்தை உருவாக்கியுள்ளதாக அந்த உணவகத்தின் உரிமையாளர் முகி தெரிவித்துள்ளார். விமானத்தின் ஒவ்வொரு பகுதியும் வதோதராவுக்கு கொண்டுவரப்பட்டு, அது உணவகமாக மாற்றியமைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விமான உணவகத்திற்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிட்டியிருக்கிறது. நிஜ விமானத்தில் பறப்பது போன்ற உணர்வை இந்த விமான உணவகம் தருவதாக உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த விமான உணவகத்தில் பஞ்சாபி, இத்தாலி, சைனீஸ், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகளும் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.