Skip to main content

பூம்புகார் அருகே ஐஸ்கிரிம் சாப்பிட்ட நூறு குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு!!!

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

பூம்புகார் அருகே உள்ள மீனவ கிராமமான வானகிரியில் கோயில் திருவிழாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள், பெரியவர்களுக்கு வாந்தி,பேதி மயக்கம், ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

poombugar


நாகை மாவட்டம் பூம்புகாருக்கு அடுத்துள்ள மீனவ கிராமம் வானகிரி. அங்கு பிரசித்தி பெற்ற ரேணுகா பரமேஷ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்கு திருவிழா இன்று நடைபெற்றது. குடமுழுக்கு திருவிழாவிற்கு நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, தரங்கம்பாடி, காரைக்கால், பழையார், சின்னங்குடி, உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர்.

அங்கு விற்பனை செய்யப்பட்ட ஐஸ்கிரீமை வெயிலின் ஊஷ்ணத்தை தணிக்க சாப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளும், பெரியவர்களும் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம், எற்பட்டு கீழே விழுந்துள்ளனர். அவர்களை மூன்று வேன்கள் மூலம் மூன்று மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
 

poombugar



இதில் 70 பேர் மயிலாடுதுறை மருத்துவமனையிலும், 20க்கும் மேற்பட்டோர் சீர்காழி மருத்துவமனையிலும், 20 பேர் திருவெண்காடு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகையில், "பூம்புகார், திருவெண்காடு, மங்கைமடம், தரங்கம்பாடி, பொறையார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய வசதி இல்லாமல், அங்குள்ள மக்கள் சாதாரண பிரச்சனை என்றாலும் மயிலாடுதுறையை மருத்துவமனையை நாடியே வரவேண்டியிருக்கிறது. மயிலாடுதுறை மருத்துவமனையோ, தலைமை மருத்துவமனையாக இருந்தும், அங்கு டாக்டர்கள்கூட இல்லாமல் திருவாரூர், தஞ்சாவூருக்கு அனுப்பும் நிலையே உருவாகியுள்ளது. இந்த சம்பத்தில் கூட திருவாரூருக்கு அனுப்ப முயற்சித்தனர், நாங்கள் போராடியதால் பல மணி நேரம் கழித்து ஒரு டாக்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  டியூட்டி டாக்டர்கள் கூட இல்லாமல், பரிதாபமான சூழலே மயிலாடுதுறை மருத்துவமனையில் உள்ளது." என்கின்றனர் வருத்தமாக. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.