Skip to main content

வி.வி.ஐ.பி. தொகுதியா விருதுநகர்?

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி ஆகிய ஆறு சட்ட மன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது விருதுநகர் மக்களவைத் தொகுதி. இதன் சிட்டிங் அ.தி.மு.க. எம்.பி. ராதாகிருஷ்ணன், "ஒரு நல்ல எம்.பி. என்று தொகுதியில் நான் பெயர் எடுத்திருக்கின்றேனா என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக எனக்குக் கெட்ட பெயர் இல்லை'’என்கிறார்.

vaikoதுணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மாவட்ட ஜெ.பேரவை செயலாளருமான ரவீந்திரநாத் குமார், தேனி தொகுதியில் போட்டியிடுவார் என்ற பேச்சிருந்தாலும், அவருடைய இன்னொரு சாய்ஸாக இருக்கிறது முக்குலத் தோர் மெஜாரிட்டியாக உள்ள விருதுநகர் தொகுதி. 1999-ல் தன் தந்தை ஜஸ்டிஸ் ராமசாமிக்கு இத்தொகுதியில் போட்டியிடவாய்ப் பளித்து, தன்னையும் 1991-ல் சரத்சந்திர சின்ஹா இந்திய காங் கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தி, விருதுநகர் எம்.எல்.ஏ. ஆக்கிய ஜெயலலிதாவின் பாச மறிந்து, எடப்பாடி எப்படி யும் தனக்கு சீட் தருவார் என்ற நம்பிக்கையில் இருக்கி றார் நடிகை ஸ்ரீதேவியின் மைத்துனரான சஞ்சய் ராமசாமி. மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா, மகன் ராஜ் சத்யனை எம்.பி. ஆக்கிப் பார்க்கவேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். திருமங்கலம் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராமலிங்கமும் ஆர்வம்காட்டி வருகிறார். ‘"விருதுநகர் தொகுதியில் நிற்பதற்கு எங்களிடம் வேட்பாளர் இருக்கிறார். பா.ம.க. மாநில பொருளாளரான கவிஞர் திலகபாமாவுக்கு சீட் தந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார்'’என்று பா.ம.க.வும் இத்தொகுதியைக் கேட்டு வைத்திருக்கிறது.

"தி.மு.க. சார்பில் போட்டி யிடுவதற்கு பசையான வேட்பாளர் யாரும் இல்லை'’என்று தலைமையிடம் விருதுநகர் மா.செ.க்கள் கே.கே.எஸ்.எஸ். ஆரும் தங்கம் தென்னரசுவும் கூறி, முன்னாள் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு வழி விட்டிருக்கின்றனர். ஏனென்றால், கே.கே.எஸ்.எஸ்.ஆரின் பேச்சைத் தட்டாதவராகவும், அனுசரித்துச் செல்பவராகவும் vaikoஇருக்கிறார் மாணிக்கம் தாகூர். இன்னொரு காரணமும் இருக்கிறது. அ.தி.மு.க. மா.செ.வும் மந்திரியுமான கே.டி.ராஜேந்தி ரபாலாஜியுடன் தொடர்பில் இருப்பவர்கள் இம்மாவட்ட தி.மு.க. மா.செ.க்கள். அதனால், தி.மு.க. வேட்பாளரை இத்தொகுதியில் நிறுத்தி, எதற்காக நட்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பும் இவர்களுக்கு உண்டு. ஆனாலும், சங்கரன்கோவில் தொழிலதிபர் அய்யாத்துரை பாண்டியனை இங்கு தி.மு.க. வேட்பாளராக நிறுத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார்கள் என்று காங்கிரஸ் தரப்பு சந்தேகம் எழுப்புகிறது. விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கருக்கும் எம்.பி. கனவு இருக்கிறது. ஆனாலும், "ராகுல் காந்தியோடு நேரடி தொடர்பில் உள்ள மாணிக்கம் தாகூருக் குத்தான் சீட்' என்கிறார்கள் அக்கட்சியினர்.

விருதுநகர் மாவட்ட காங்கிரஸில் உள்ள முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன், முன்னாள் சிவகாசி சேர்மன் ஞானசேகரன், விருதுநகர் நகராட்சியின் முன்னாள் துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி போன்ற சீனியர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக மாணிக்கம் தாகூர் மீது வருத்தம் கொண்ட கதர்ச்சட்டை கள், ‘புதுமுகம்’ ஒன்றே காங்கிரஸ் தலைமையின் சாய்ஸாக இருக்கும் என்கிறார்கள். யார் அந்தப் புதுமுகம் என்று கேட்டால், குவைத் ராஜா மக்கள் சமூக இயக்கம் என்ற பெயரில் அவ்வப்போது நலத்திட்ட உதவிகளெல்லாம் வழங்கி, தனி ராஜாங்கம் நடத்திவரும் ராஜபாளையத்தைச் சேர்ந்த குவைத்ராஜாவைக் கை காட்டுகிறார்கள்.

மாணிக்கம் தாகூரோ “"குவைத்ராஜா விருதுநகர் தொகுதியின் வேட்பாளரா? இது காங்கிரஸ் பேரியக்கம். அ.தி.மு.க. போன்ற கட்சி அல்ல. மாவட்ட, மாநில தலைவர்களுக்குத் தெரி யாமல், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் எப்படி காங்கிரஸ் வேட்பாளராக முடியும்?' என்று கேட்கிறார். ஆனாலும், டெல்லி தொடர் புள்ள குவைத்ராஜா, நேரடியாகவே காய் நகர்த்தி வருகிறார். "அவரது கொடைவள்ளல் இமேஜ் குறித்து காங்கிரஸ் தலைமை தெரிந்துகொண் டால், அவர்தான் வேட்பாளர்' என்கிறார்கள், மாணிக்கம் தாகூர் அதிருப்தியாளர்கள்.

முக்குலத்தோர் மெஜாரிட்டியாக உள்ள தொகுதி என்பதால், அ.ம.மு.க.வும் வரிந்து கட்டுகிறது. அ.தி.மு.க.வும் காங்கிரஸும் முக் குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தி வாக்குகளைப் பிரிக்கும்போது, கணிசமான வாக்குகளைக்கொண்ட நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த, விருதுநகர் கிழக்கு மா.செ. வும் முன்னாள் அமைச்சருமான இன்பத்தமிழ னைக் களமிறக்கும் யோசனை யில் இருக்கிறது அக்கட்சித் தலைமை. முன்னாள் சபாநாய கர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, ஸ்ரீவில்லி புத்தூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் செந்தில்குமாரியின் கணவர் முத்துராஜ் போன்றவர்களும் வேட்பாளர் பட்டியலில் உள்ளார்கள்.

சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தபோது, 1998, 1999, 2004 ஆகிய மூன்று தேர்தல்களில் இத்தொகுதியைக் கைப்பற்றியது ம.தி.மு.க. இரண்டு தடவை இத்தொகுதியின் எம்.பி. யாக டெல்லி சென்றார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ. விருதுநகர் மக்களவை தொகுதியாக மாறிய பிறகு, பாராளுமன்றத்தில் கர்ஜிக்கக் கூடிய வைகோ ஏனோ இத்தொகுதி மக்களின் சாய்ஸாக இல்லை. எம்.பி.யாக இருந்த போது சிறப்பாகச் செயல்பட்டவர் என்ற நற்பெயரும், கணிச மாக உள்ள நாயக்கர் சமுதாய வாக்குகளும் அவருக்குப் பலம் சேர்ப்பதாக இருந்தாலும், திருச்சி தொகுதியில் போட்டி யிடும் முடிவில் இருக்கிறாராம் அவர். ஒருவேளை, விருதுநகர் தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கிவிட்டால், பட்டாசுத் தொழில் முடக்கம் போன்ற அதிமுக்கிய பிரச்சனைகளால் தொகுதி மக்கள் பலரும் அவதிப் படும் நிலையில், வைகோ போட்டியிட்டால் வெற்றி உறுதி என்று அடித்துச் சொல் கிறார்கள் மறுமலர்ச்சியினர்.

வைகோ போட்டியிட்டால் வி.வி.ஐ.பி. தொகுதியாகி விடும் விருதுநகர்!
 

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.