Skip to main content

"சசிகலா குறித்த எடப்பாடி பழனிசாமியின் பேச்சை அவர் சார்ந்த சமூக மக்கள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்..!" - தேனி கர்ணன் பேச்சு!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

cn

 

அதிமுகவில் சசிகலா என்ற பேச்சுக்கே இடமில்லை, இரண்டு அணிகளும் இணையும்போதே அதற்கான உறுதிமொழியை இரண்டு தரப்பும் ஏற்றுக்கொண்டுதான் இந்த இணைப்பு சாத்தியமானது. எனவே சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்வியே தேவையில்லாதது. சசிகலா தொடர்பாக யார் ஆதரவு தெரிவித்து பேசினாலும் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள் என தேனி கர்ணனிடம் நாம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

"இந்த இணைப்பு எப்படி நடைபெற்றது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு இந்தப் பிரிவு ஏற்பட யார் காரணம் என்று பார்க்க வேண்டும். அண்ணன் ஓ.பி.எஸ். முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது கூட எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதன்பிறகு சின்னம்மாவுக்கும், அண்ணன் ஓபிஎஸ்க்கும் இடையே முடிந்த அளவு இந்தக் கருங்காலிகள் பிரச்சனைகளை ஏற்படுத்தினார்கள். அதன் விளைவாக இருவருக்கும் இடையே பேசுவதற்கு வாய்ப்பு என்பதே அமையவில்லை. அப்போது அண்ணன் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். இதை யார் தூண்டி அவர் அவ்வாறு செய்தார் என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாக இருவரும் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புகளே அமையவில்லை. அவ்வாறு அமைந்திருந்தால் இன்றைக்கு வரை அண்ணன் ஓபிஎஸ் தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்திருப்பார். அதை இந்த துரோகிகள் தடுத்தது மட்டுமில்லாமல், இன்றைக்கு அதிமுகவை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளனர். 

 

இன்றைக்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் சின்னம்மாவை எதிர்க்கிறார்கள், மூன்று பேர்தான் தொடர்ந்து அவதூறு தெரிவித்து எதிர்க்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், கே.பி. முனுசாமி இவர்களைத் தவிர வேறு யாராவது சின்னம்மாவை எதிர்த்து கருத்து தெரிவிக்கிறார்களா? அதிமுகவில் எத்தனையோ பழுத்த சீனியர்கள் இருக்கிறார்கள், ஆனால் சின்னம்மா குறித்து இதுவரை ஒருவர் கூட வாய்திறக்கவில்லையே. இவர்கள் மூன்று பேர் மட்டும்தானே தொடர்ந்து பேசிவருகிறார்கள். தனக்குப் பதவி அளித்த சின்னம்மாவை இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி எப்படி பேசுகிறார் என்று பார்க்க வேண்டும். மிகவும் அவமரியாதை செய்யும் விதமாக தொடர்ந்து பேசிவருகிறார். அவரின் இந்தப் பேச்சை அவரது சமூகம் சார்ந்த மக்கள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் பள்ளி செல்லும் குழந்தை கூட பிறருக்கு மரியாதை தரும் வழக்கத்தைக் கொண்டவர்கள் கொங்கு பகுதி மக்கள். கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு அவர்கள் வாக்களித்தது கூட அம்மா, புரட்சித் தலைவரை மனதில் வைத்து அவர்கள் அதிமுகவுக்கு வாக்களித்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு நாங்கள் வாக்களிக்கவில்லை என்று அவர்களே எங்களிடம் கூறுகிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமி கள நிலவரம் புரிந்து செயல்படுவது மிக நல்லது. தான் செய்த தவறுக்காக அவர் விரைவில் ஜெயிலுக்கு செல்வார். அவ்வாறு அவர் சிறை சென்றால்தான் அம்மாவின் ஆத்மா சாந்தியடையும்" என்றார்.

 

 

Next Story

களத்தில் குதித்த 5 ஓ.பி.எஸ்.கள்- எடப்பாடி தரப்புக்கு கிடைத்த கிரீன் சிக்னல் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
5 OPSs that jumped into the field – a green signal for the Edappadi side

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறு தனது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலாகத் தனது அணிக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதே சமயம் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை சிலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. எங்களிடம் உள்ள ஆவணத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என உள்ளது' எனத் தெரிவித்துள்ளது. இதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடையில்லை என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். அதேநேரம் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓபிஎஸ்-இன் இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story

திருச்சி தொகுதி அதிமுக சீட் யாருக்கு? - உச்சத்தில் விஜயபாஸ்கர் - தங்கமணி மோதல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

Trichy Constituency ADMK seat for whom? Vijayabaskar - Thangamani conflict at the peak!

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக கூட்டணியில் திருச்சி தொகுதி யாருக்கு என்ற முட்டல் மோதல்கள் பலமாக உள்ளதாம். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் ஆர்.வி. பரதன், தனக்கு திருச்சி அல்லது பெரம்பலூர் தொகுதி கொடுத்தால் தமிழ்நாடு முழுவதும் எங்கள் ஆட்கள் கட்சிக்காக வேலை செய்வார்கள் என்று எடப்பாடி கே. பழனிசாமியிடம் கோரிக்கையோடு போக, திருச்சி தொகுதிப் பொறுப்பாளரான மாஜி தங்கமணியும் ஆமோதித்துள்ளார். ஆனால் திருச்சி தொகுதியை கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் கரிகாலனின் சகோதரரான புதுக்கோட்டை மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையாவுக்கே கொடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை வடக்கு மா.செ. விஜயபாஸ்கர் மதியம் வரை எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான், திருச்சியை தங்கள் கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒதுக்குவது வரை போன எடப்பாடி, தேமுதிகவுக்கு தஞ்சை தொகுதியை கொடுத்துவிட்டு திருச்சியை நிலுவையில் வைத்துள்ளார். தொகுதிப் பொறுப்பாளரான தான் பரிந்துரை செய்த வேட்பாளருக்கு சீட் கிடைக்கவிடாமல் தான் பரிந்துரைக்கும் பாசறை கருப்பையாவுக்கு சீட் வாங்க மோதும் விராலிமலை விஜயபாஸ்கரிடம், உங்கள் பொறுப்பு தொகுதியை மட்டும் கவனியுங்கள். என் பொறுப்பு தொகுதிக்குள் வரவேண்டாம் என்று தங்கமணி விராலிமலை விஜயபாஸ்கரிடம் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருச்சி தொகுதி சீட்டுக்காக அதிமுக மாஜிக்களின் மோதல்கள் உச்சத்தில் இருப்பதால் விடியும்போது சீட் யாருக்கு என்று முடிவெடுப்பார் எடப்பாடி என்கிறார்கள் விவரமறிந்த ர.ர.க்கள். பரதனிடம் பேசிய எடப்பாடி, நாளைய விடியல் நல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கை கூறி இருப்பதாகவும் பேசுகின்றனர். அதே நேரத்தில் மா.செ. விஜயபாஸ்கர், சீட் எனக்குத்தான் வாங்கித் தருவார் நான் தான் வேட்பாளர் என்று கட்சியினரிடம் சொல்லி வாழ்த்துகளையும் பெற்று வருகிறார் பாசறை கருப்பையா.