Skip to main content

திமுக இளைஞரணியும், மாணவரணியும் இனியும் இணைந்து செயல்படுமா?

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

திமுக இளைஞரணியின் உடனடி போராட்ட நடவடிக்கைகள் திமுகவினரை உற்சாகப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அதைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்தை இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.


அவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு சட்டநகலைக் கிழித்து கைதானார். மாலையில் விடுவிக்கப்பட்டாலும், இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றபிறகு சிறைப்பட்ட முதல் அனுபவத்தை பெற்றார்

dmk party youngsters team and students team has merge working

பொதுவாக ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளர் ஆனபிறகு தமிழகம் முழுவதும் பயணம் செய்து இளைஞரணிக் கிளைகளை தொடங்கினார். ஆனால், 40 வயது வரை மட்டுமே இளைஞரணிப் பொறுப்புக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், திமுக பொருளாளர் ஆன பிறகும் ஸ்டாலின் இளைஞரணிப் பொறுப்பை யாருக்கும் கொடுக்கவில்லை.


ஏனெனில், திமுகவின் அமைப்புக்கு நிகராக இளைஞரணி பலம் பொருந்தியதாக இருந்தது. இளைஞரணி தொடங்கப்பட்ட பிறகுதான் திமுகவில் மாணவரணி பின்னுக்குத் தள்ளப்பட்டது. பொதுவாக, மாணவர்களையும் படித்த இளைஞர்களையும் அடித்தளமாகக் கொண்டே திமுக வளர்ந்தது. கல்லூரிகளில் இருந்தே திமுகவின் பொறுப்பாளர்களில் பலர் உருவானார்கள்.


மாணவர் அணி என்பதை நாற்றங்காலாகவும், இளைஞரணி என்பதை விளைநிலமாகவும் கருதி திமுக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று யோசனைகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த காலங்களில் மாணவர்களை பாதிக்கிற எந்த விஷயத்திற்கும் உடனடியாக களம்கண்டதில்லை.

dmk party youngsters team and students team has merge working

இதற்கு காரணம் இளைஞரணிதான். இளைஞரணிப் பொறுப்பாளராக ஸ்டாலின் இருந்தவரை அவருடைய வயதுக்கு நிகரான இள.புகழேந்தியே மணவர் அணி செயலாளராக நீடித்தார். ஒரு காலத்தில் கல்லூரிகளில் திமுக மாணவர் அமைப்பு பலம் பொருந்தியதாக இருந்தது. மாணவர் பேரவைத் தேர்தல்களில் திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டிருந்தன. பின்னர் ஒரு கட்டத்தில் திமுகவின் ஆதிக்கத்தை தடுக்கும் நோக்கத்துடன் பேரவைத் தேர்தல்களை அதிமுக அரசு தடை செய்தது.


இந்தக் காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்எப்ஐ அமைப்பு மாணவர்களிடம் ஊடுருவத் தொடங்கியது. பாஜகவின் ஏபிவிபியும் கணிசமான மாணவர்களை ஈர்க்கத் தொடங்கியது. எம்ஜியாருக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர், ஜெயலலிதா ஆகியோரும் மாணவர் பேரவைத் தேர்தல் குறித்து அக்கறை காட்டவில்லை. ஆனால், அதிமுக இளைஞர் இளம்பெண் பாசறை, மாணவர் அணி ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.


என்னதான் இருந்தாலும், திமுக மாணவர் அமைப்பு செயல்படாத வெறும் பெயருக்கான அமைப்பாகவே தொடர்ந்தது. இந்நிலையில்தான் இளைஞரணிக்கு ஸ்டாலின் தனது மகனை உதயநிதியை செயலாளராக நியமித்தார். உடனே அதுவரை இல்லாத முக்கயத்துவம் இளைஞரணிக்கு கிடைத்தது. கலைஞரின் மகன் என்பதால் எப்படி ஸ்டாலின் தலைமையிலான இளைஞரணிக்கு திமுகவில் முக்கியத்துவம் கிடைத்ததோ, அதே அளவுக்கு உதயநிதி தலைமையிலான இளைஞரணிக்கும் புகழ் வெளிச்சம் கிடைக்கத் தொடங்கியது.

dmk party youngsters team and students team has merge working

உதயநிதி செயலாளர் ஆனதாலோ என்னவோ, திமுகவின் மூத்த தலைவர் மறைந்த சிவிஎம் அண்ணாமலையின் பேரன் சிவிஎம்பி எழிலரசன் மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்டதுடன், ஐஐடி மாணவர் பிரச்சனை உள்ளிட்ட விஷயங்களில் உடனுக்குடன் கண்டன அறிக்கைகள் வெளிவந்தன. சில போராட்டங்களையும் முன்னெடுத்தது. ஆனால், இளைஞரணி அளவுக்கு எழுச்சி இல்லை என்ற குறை இருந்தது.


இந்நிலையில்தான் படிக்கிற காலத்திலிருந்தும் படித்து முடித்த பின்னரும் அரசு வேலை வாய்ப்புக்கு இருந்த ஒரு வாய்ப்பான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக மாணவர் அணியும், இளைஞர் அணியும் இணைந்து போராட்டத்தை நடத்தி இருக்கின்றன. வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடந்திருக்கிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம் என்று கருதப்படுகிறது.


திமுகவில் இளைஞர்கள் மாணவர்கள் என்பவர்கள், கட்சிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். கட்சிக்கு அப்பாற்பட்ட இளைஞர்கள் தமிழ்தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்களே ஈர்த்துவிடுகிறார்கள். மாணவப் பருவத்திலிருந்தே தமிழ்மொழிப் பற்று, மாநிலப் பற்று, தமிழகத்தின் தனித்தன்மை ஆகியவற்றை ஊட்டி வளர்க்க வேண்டிய திமுக இனியேனும் மாணவர்களாக இருக்கும்போதே இளைஞர்களை கவரும் வகையில் மாணவர் அணியையும் இளைஞர் அணியையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்று இளைய தலைமுறையினர் எதிர்பார்க்கிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister MK Stalin praises chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில்  இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார்.