Skip to main content

அழகிரி பேத்தியுடன் தகராறு! கைதாகிறாரா கண்ணன் ஐ.ஏ.எஸ்.!

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

conflict between Tamilnadu Congress leader KS Alagiri's grand daughter and Kannan IAS

 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பேத்தி மீது நடந்த தாக்குதலில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜாமீனில் வரமுடியாத செக்சன்களில் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டிருப்பதால் அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது செய்யப்படுவாரா? என்கிற அதிர்ச்சியும் கூடுதலாக பரவி வருகிறது.

 

சென்னையில் பரபரப்பாக இயங்கும் சாலைகளில் ஒன்றான வடபழனி 100 அடி சாலையில் கடந்த 30-ந் தேதி இரவு 9.30 மணி அளவில் பறந்து சென்ற இரண்டு கார்கள், ஒன்றை ஒன்று முந்திக்கொள்ள முயற்சிக்கிறது. லஷ்மன் சுருதி சிக்னல் அருகே ஒரு காரை வழிமறித்து நிற்கிறது மற்றொரு கார். வழி மறித்த காரில் இருந்து இறங்கிய ஒரு பெண்ணும் ஒரு இளைஞனும், வழி மறிக்கப்பட்ட காரினுள் உட்கார்ந்திருந்த பெண்மணியிடம், "எதற்கு இப்படி காரை ஓட்டுகிறீர்கள்? யார் நீங்கள்?'' என்று அதட்டலாக கேட்டிருக்கிறார்கள். அதற்கு கோபமாகப் பேசுகிறார் அந்த பெண்மணி. இரு தரப்பிலும் கோபமாகவும், ஆபாச மாகவும், ஒருமையிலும் வார்த்தைகள் தடித்தன. காரில் இருந்து இறங்கிய அந்த பெண்மணியும் அவரது கார் டிரைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில், விஷயமறிந்து பைக்கில் விரைந்து ஸ்பாட்டுக்கு வந்த அந்த பெண் மணியின் கணவர், இளம் பெண்ணை அறைந்திருக்கிறார். இதனால் அந்த பகுதியே பரபரப்புக்குள்ளானது.

 

conflict between Tamilnadu Congress leader KS Alagiri's grand daughter and Kannan IAS

 

சம்பவத்தை அறிந்து ஓடோடி வந்த போக்குவரத்து போலீசார், இரு தரப்பையும் சமாதானப்படுத்தி விசாரித்த போதுதான், அந்த இளம் பெண்ணும், இளைஞரும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பேரன் பேத்தி (சுபாஷ், பாரதி) என்பதும், அறைந்த நபர் ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் என்பதும். அந்த பெண்மணி அவரது மனைவி என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தது போலீஸ். இதனை மேலதிகாரியிடம் போலீசார் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார் அசோக்நகர் காவல்நிலைய உதவி கமிஷனர் தனசெல்வம்.

 

இரு தரப்பும் சமாதானமாகாததால் ஸ்டேஷனுக்கு வாருங்கள் என அவர்களை அழைத்துச் சென்றார் உதவி கமிஷனர். நடந்த சம்பவத்தை தனது தாத்தா அழகிரியிடம் தெரிவித்தார் அவரது பேத்தி பாரதி. பதறிப்போன அழகிரி அந்த இரவு நேரத்தில் அவசர அவசரமாக ஸ்டேஷனுக்கு வந்தார். ஸ்டேசனுக்கு அழகிரி செல்வது காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பாஸ் ஆக, காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் ஸ்டேசனில் குவிந்தனர்.

 

இரு தரப்பும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டியதால் அவர்களைச் சமாளிக்க முடியாமல் திணறியது போலீஸ். உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இரு தரப்பிலும் புகாரை பெற்றுக் கொண்டு பதிவு செய்து கொள்ளுங்கள் என மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின்படி இரு தரப்பிலும் புகார் பெறப்பட்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன், டாக்டர் விஜயலட்சுமி, கார் டிரைவர் முத்துராஜா ஆகியோர் மீது அழகிரியின் பேரன் சுபாஷ் கொடுத்த புகாரை பதிவு செய்தனர்.

 

conflict between Tamilnadu Congress leader KS Alagiri's grand daughter and Kannan IAS

 

இவர்கள் மீது ஜாமீனில் வரமுடியாத பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது (க்ரைம் எண்: 261/2022, 30.09.2022). அதே சமயம், அழகிரியின் பேரன் சுபாஷ், பேத்தி பாரதி மீது டாக்டர் விஜயலெட்சுமி கொடுத்த புகார் பதிவு செய்யப்படவில்லை.

 

இந்த விவகாரம் அரசியலிலும், அதிகாரிகளிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், என்ன நடந்தது என்பதையறிய கண்ணன் ஐ.ஏ.எஸ்.ஸை தொடர்புகொண்டு பேசியபோது, "நாங்கள் எந்தத் தவறையும் முதலில் செய்யவில்லை. கோபமாகவும் ஆபாசமாகவும் பேசியது அவர்கள் தான். இந்த பிரச்சனை போலீஸ் விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு எதையும் நான் பேச விரும்பவில்லை'' என்பதோடு முடித்துக் கொண்டார்.

 

கண்ணனுக்கு நெருக்கமான தரப்பினரிடம் விசாரித்தபோது, “கண்ணன் மனைவி சென்ற காரை எம்.எம்.டி.ஏ. 100 அடி சாலையில் இருந்தே ஹாரன் அடித்தபடி ஓவர்டேக் செய்ய அழகிரியின் பேத்தியும் பேரனும் முயற்சித்தனர். அவர்கள் அடித்த ஹாரன் அலறலில் விஜயலட்சுமி பயந்தார். இயல்பாக வரக்கூடிய கோபம் அவருக்கு வந்தது. அழகிரி பேத்தியின் கார் ஓவர்டேக் செய்த போது, அவர்களை கோபமாக திட்டியிருக்கிறார் விஜயலெட்சுமி. அத்துடன் அவர்களது காரை முந்திச் செல்லுமாறு தனது டிரைவரிடம் விஜயலட்சுமி சொல்ல, அவரும் முந்திச்சென்றார்.

 

இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ், விஜயலெட்சுமியின் காரை ஓவர்டேக் செய்து வழிமறித்தனர். கீழே இறங்கி வந்த அழகிரியின் மகள் மற்றும் சுபாஷும் பாரதியும் மிக மோசமாக நடந்து கொண்டனர். விஜயலெட்சுமியை அர்ச்சித்தார் சுபாஷ். காரிலிருந்து இறங்கிய விஜயலெட்சுமியிடம், "நான் யார்னு தெரியுமா? காங்கிரஸ் தலைவரோட பேரன்' என்றெல்லாம் திமிராகப் பேச, அந்த சமயத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அழகிரியின் பேத்தி பாரதி, விஜயலட்சுமியை அறைய கையை ஓங்கியிருக்கிறார். அதனைத் தடுப்பதற்காக விஜயலட்சுமியும் கையை ஓங்க, அங்கே ரசாபாசமாகி விட்டது.

 

conflict between Tamilnadu Congress leader KS Alagiri's grand daughter and Kannan IAS

 

இப்படி பிரச்சனை நடந்து கொண்டிருப்பதை கண்ணனுக்கு இன்ஃபார்ம் பண்ணியிருக்கிறார் விஜயலட்சுமியின் டிரைவர் முத்துராஜா. அதைக் கேட்டு டென்சனாகி ஸ்பாட்டுக்கு வந்த அவர், சுபாஷை அறைந்துவிட்டார். அது உணர்ச்சி வேகத்தில் நடந்த தவறு. அரசியல் செல்வாக்கினாலும் சட்டப் படிப்பை படித்து வருவதாலும் உருவான திமிரில்தான் அழகிரியின் பேத்தியும் பேரனும் அப்படி நடந்துகொண்டனர்'' என்கிறார்கள்.

 

அழகிரியின் பேரன் சுபாஷ், பேத்தி பாரதி இருவரிடமும் பேச நாம் முயற்சித்த போது அவர்களது தொடர்பு கிடைக்கவில்லை. கே.எஸ். அழகிரியை தொடர்பு கொண்டபோது நமது லைனை அவர் அட்டெண்ட் பண்ணவில்லை. இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று போலீஸ் ஸ்டேசனில் திரண்டிருந்த காங்கிரஸ்காரர்களிடம் விசாரித்தபோது, “அண்ணாநகரில் பரதநாட்டியம் வகுப்பை முடித்துவிட்டு கே.கே.நகருக்கு அழகிரியின் பேரனும் பேத்தியும் திரும்பிக் கொண்டிருந்தனர். எம்.எம்.டி.ஏ. காலனியை தாண்டியதிலிருந்தே பின்னால் வந்த ஒரு ஹோண்டா சிட்டி கார் ஹாரன் அடித்தபடி ஓவர் டேக் பண்ண முயற்சித்தது. காரை உரசுவது போல பயமுறுத்தியது. வடபழனி சிக்னல் வரை பிரச்சனை பண்ணிக்கொண்டே இருந்தது.

 

லஷ்மண் சுருதி சிக்னலில் இவர்களின் காரை வழிமறித்தார். அந்தப் பெண்மணி வண்டியிலிருந்து இறங்காமலே ஆபாசமாக திட்டினார். வண்டியிலிருந்து இறங்கிய பாரதியும் சுபாஷும் அந்த பெண் மணியிடம் "ஏம்மா இப்டி ஸ்பீடா ஓட்டுறீங்க?' என்று கேட்க, அவரோ கார் கண்ணாடியையே இறக்காமல் செருப்பைத் தூக்கிக் காட்டியிருக்கிறார். மேலும் அந்தப் பெண்மணி, "நான் யார் தெரியுமா? ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி. தொலைச்சிடுவேன்' என மிரட்டினார். இதனால் வாய்த்தகராறு நடக்க, கீழே இறங்கிய அந்த பெண்மணி, பாரதியிடம் "வாயை மூடுடி' எனச் சொல்லிக்கொண்டே, கன்னத்தில் அறைந்தார். அப்போது பின்னாலேயே வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன், "என்னடா நாயே' எனத் திட்டிக்கொண்டே சுபாஷை அடித்தார். இதனால் சாலையில் களேபரமானது. ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், சமாதானப்படுத்த முயற்சிக்க, கண்ணன் அடங்கவில்லை. மது அருந்தியிருந்ததால் அவர் பேச்சு மிக மோசமாக இருந்தது. பாரதியையும் சுபாஷையும் ஆபாசமாக திட்டிக்கொண்டே இருந்தார்கள்.

 

ஸ்டேசனுக்கு அழைத்து சென்றது போலீஸ். விஷயமறிந்து ஸ்டேசனுக்கு வந்தார் அழகிரி. காங்கிரஸ் நிர்வாகிகளும் திரள, காவல்துறை அதிகாரிகளிடம், "பொறுப்புள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தும் அவரது பேச்சும் செயலும் நாகரீகமாக இல்லை. என்னுடைய பேரன் பேத்தி என்பதற்காகவோ, அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதற்காகவோ எந்தச் சலுகையும் காட்ட வேண்டாம். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுங்கள். அதேசமயம், அவர் மன்னிப்பு கேட்டுவிட்டால் பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்' எனச் சொன்னார் அழகிரி. மன்னிப்பு கேட்கச் சொல்லி கண்ணனிடம் வலியுறுத்தினர் போலீஸார். ஆனா, அவரோ, "எஃப்.ஐ.ஆர். போட்டுக்கோ; பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்துக்கிறேன்' என ஓவராக எகிற, "புகார் கொடுங்கள்; நடவடிக்கை எடுக்கிறோம்' என போலீஸ் சொன்னதும், நடந்ததை விவரித்து புகார் கொடுத்தார் சுபாஷ்.


அதன்பேரில் ஜாமீனில் வரமுடியாத செக்ஷனில் வழக்குப் பதிவு செய்தனர். தலைவர் அழகிரி சொன்னது போல, அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் பிரச்சனை பூதாகரமாகியிருக்காது. மது அருந்தியிருந்ததால் கண்ணனின் பேச்சு எல்லை மீறிப்போனது. அவர் மது அருந்தியதற்கான சான்றிதழும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், "நடந்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன். புகாரை வாபஸ் வாங்குங்கள்' என மறுநாளிலிருந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறார் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன்'' என்று நடந்ததை விவரிக்கின்றனர்.


இதற்கிடையே, அழகிரியின் பேத்தி பேரனுக்கு எதிராக டாக்டர் விஜயலட்சுமி கொடுத்த புகார் பதிவாகாததால் அது குறித்து போலீசாரிடம் விசாரித்தபோது, “புகார் கொடுத்தனர். ஆனால், அது முறையாக இல்லை. கேட்ட கேள்விகளுக்கும் சரியான பதிலை அவர்கள் சொல்லாததால் பதிவு செய்யாமல் கிடப்பில் வைத்திருக்கிறோம். முழு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே, விஜயலட்சுமி, கண்ணனின் மனைவி இல்லை என ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அது உண்மையா என விசாரித்து வருகிறோம்'' என்றனர்.


இந்த விவகாரம் 30-ந் தேதி இரவு முழுக்க வெடித்துக் கொண்டிருக்க, அக்டோபர் 1-ந் தேதி சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்துக்கு வந்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். அழகிரியும் அந்த நிகழ்வுக்கு வர, முந்தைய நாள் நடத்த விவகாரத்தை அவரிடம் கேட்டறிந்தார் ஸ்டாலின்.


இந்த நிலையில், கண்ணனை கோட்டைக்கு வரவழைத்து விசாரித்திருக்கிறார் தலைமைச் செயலாளர் இறையன்பு. தன் மீது தவறில்லை என்கிற தொனியில் விளக்கமளித்துள்ளார் கண்ணன்.


ஆனால், கடந்த 10 ஆண்டு காலமாக பெரும்பாலான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் சேவை மனப்பான்மை சுத்தமாக இல்லை. குறுநில மன்னர்கள் போல அதிகாரம் செலுத்துகின்றனர். இதனால் மக்களுக்கும் அதிகாரிகளுக்குமான இடைவெளி அதிகரிப்பதுதான் பொதுவெளியில் இப்படிப்பட்ட எல்லை மீறும் அதிகாரமாக வெளிப்படுகிறது'' என்கிறார்கள் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.