Skip to main content

தி.மு.க. வட்டச்செயலாளர் கொலை-மேலும் 5 பேர் கைது!

Published on 03/02/2022 | Edited on 03/02/2022

 

 5 more arrested in dmk  Administrator incident

 

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வம். 38 வயதாகும் இவர் நேற்று முன்தினம் (01/02/2022) இரவு 09.00 மணியளவில் ராஜாஜி நகர் பிரதான சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆறு பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டி விட்டு இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது. உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

 

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் செல்வம். 38 வயதாகும் இவர் நேற்று முன்தினம் (01/02/2022) இரவு 09.00 மணியளவில் ராஜாஜி நகர் பிரதான சாலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆறு பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டி விட்டு இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்றது. உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

 

இவ்வழக்கு தொடர்பாக ராதாகிருஷ்ணன், தனசீலன் ஆகிய இரண்டு பேரை திருச்சி, சமயபுரம் சுங்கச்சாவடியில் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த கொலை தொடர்பாக விக்கிரவாண்டியில் 5 பேரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். காரில் தப்பிய விக்னேஷ், புவனேஷ் குமார், சஞ்சை, விக்னேஷ், கிஷோர் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்