Skip to main content

"முன்னாள் கரோனா நோயாளி என்ற முறையில் இதைக் கூறுகிறேன்" - இங்கிலாந்து பிரதமர் ஐநா சபையில் பேச்சு!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

Boris Johnson

 

கரோனா தடுப்பூசி அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐநா சபையில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.

 

கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து பரவத்தொடங்கிய கரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இவ்வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. அவற்றில் பல ஆய்வுகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐநா சபையின் 75 ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் கரோனா தடுப்பு மருந்து குறித்துப் பேசியுள்ளார்.

 

அதில் அவர், "கரோனா வைரஸ் எவ்வாறு பரவியது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். எந்த ஒரு நாட்டையும் குறை கூறுவது என் நோக்கமில்லை. அதே வேளையில், முன்னாள் கரோனா நோயாளி என்ற அடிப்படையில் நான் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் இனி நம்மை தற்காத்துக் கொள்ள உதவும். உலக அளவில் நூறுக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பு மருந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தால் அஸ்ட்ராசெனகா நிறுவனம் அதை உலகம் முழுக்க விநியோகிக்கத் தயாராக உள்ளது. மேலும்  அஸ்ட்ராசெனகா நிறுவனம் 100 கோடி டோஸ் தடுப்பூசிகளை நடுத்தர நாடுகளுக்கு விநியோகிக்க இந்தியாவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. சோதனை வெற்றிகரமாக முடிந்து கிடைக்கும் தடுப்பூசி அனைத்து நாடுகளுக்கும் சரியான அளவில் கிடைக்க வேண்டும். அது தான் அனைத்து நாட்டு மக்களையும் பாதுகாக்கும்" எனப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொறுப்பேற்ற வேகத்தில் ராஜினாமா-பிரதமர் இன்றி தவிக்கும் இங்கிலாந்து

Published on 20/10/2022 | Edited on 20/10/2022

 

 Resignation at the pace of taking over - England struggling without a prime minister

 


இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் கடந்த மாதம் 6 தேதி பதவியேற்ற நிலையில் பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனாக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பிய நிலையில், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்றால் பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவு  வலுப்படும் எனவும் கருதப்பட்டது.

 

இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான தேர்தல் கன்செர்வேட்டிவ் கட்சிக்குள் நடந்து முடிந்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமர் போட்டியிலிருந்த பிரிட்டன் லிஸ் ட்ரஸை மகாராணி எலிசபெத் முறைப்படி அறிவித்தார். அதன்பின் எலிசபெத் ராணியின் உயிரிழப்பு இங்கிலாந்தை சோகத்திற்குள்ளாக்கியது. அதனைத்தொடர்ந்து லிஸ் ட்ரஸ் தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் சர்ச்சைக்குள்ளான நிலையில் அடுத்தது பல்வேறு அமைச்சர்கள் பதவி விலகினர். இந்நிலையில் பிரதமராக பதவியேற்ற  45 நாட்களில் தற்பொழுது பிரதமர் பதவியை லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய பிரதமர் அறிவிக்கப்படும் வரை காபந்து பிரதமராக லிஸ் ட்ரஸ் இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 

 

 

Next Story

இங்கிலாந்து புதிய பிரதமர்; எதிர்த்து பதவி விலகும் உள்துறை அமைச்சர்

Published on 06/09/2022 | Edited on 06/09/2022

 

New Prime Minister of England; Home Minister resigns her Position

 

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவி ஏற்கும் நிலையில் அவர் பதவி ஏற்றவுடன் தனது உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ப்ரித்தி படேல் அறிவித்துள்ளார்.

 

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனாக். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பிரிட்டனின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பிய நிலையில், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்றால் பிரிட்டன்-இந்தியா இடையேயான உறவு  வலுப்படும் எனவும் கருதப்பட்டது.

 

இந்நிலையில் பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான தேர்தல் கன்செர்வேட்டிவ் கட்சிக்குள் நடந்து முடிந்த நிலையில், நேற்று பிரிட்டனின் புதிய பிரதமர் யார் என்பதை பிரிட்டன் மகாராணி எலிசபெத் முறைப்படி அறிவித்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக், லிஸ்டர்ஸ் ஆகியோர் முன்னிலையிலிருந்த நிலையில் இவர்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டர்ஸ்  பிரிட்டனின் அடுத்த பிரதமராக நேற்று அறிவிக்கப்பட்டார். இவர் பதவியேற்ற பிறகு புதிய அமைச்சரவை அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இன்று லிஸ் ட்ரஸ் பிரதமராக பதவி ஏற்கும் நிலையில் அவரது பதவி ஏற்கப் போவதை எதிர்க்கும் வகையில் இங்கிலாந்து உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக ப்ரீத்தி படேல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது ராஜினாமா கடிதத்தை தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வழங்கி அதை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.