Skip to main content

அப்பாவுக்கு ரொம்ப முடியல... இதை வச்சுட்டு பணம் கொடுங்க... பலரை ஏமாற்றிய இளம்பெண்!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019

சென்னை ஸ்டான்லி மருத்துவனையில் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை தங்க நாணயத்தை வைத்து கொண்டு பணம் கொடுங்கள் என்று இளம்பெண் ஒருவர் ஏமாற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் இளம் பெண் ஒருவர் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளார். அப்போது தந்தையின் மருத்துவ செலவிற்கு பணம் இல்லை என்று அங்கு நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் கூறியுள்ளார். அதோடு அந்தப் பெண் என்னிடம் இந்த தங்க நாணயம் தான் இருக்கிறது இதை வைத்து கொண்டு 500 ரூபாய் கொடுங்கள் போதும் என் தந்தையின் மருத்துவ செலவை இதை வைத்து பார்த்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார். நோயாளிகளை பார்க்க வருபவர்களும் இந்த பெண்ணிற்கு உதவலாம் என்று நினைத்து, அவள் சொல்வது உண்மை என்று நம்பி தங்க நாணயத்தை வெறும் 500 ரூபாய்க்கு பணம் கொடுத்து வாங்கி சென்றுள்ளனர். இதேபோல், பலரிடம் அந்த இளம்பெண் பணம் நாணயத்தை கொடுத்து பணம் பெற்றுள்ளார். அவ்வாறு தங்க நாணயத்தை வாங்கிச் சென்றவர்கள், அதனை கடையில் கொடுத்தபோது, அது போலி நகை என தெரிந்தது. 

 

priya



மேலும் அவை அனைத்தும் கவரிங் நகைகள் என தெரிந்து ஏமாந்தது அருகில் இருக்கும் வண்ணாரப்பேட்டை காவல் துறைக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். அதன் பின்பு புகாரின் அடிப்படையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை நடத்தி தங்க நாணயம் என ஏமாற்று வேலையில் ஈடுபட்ட இளம்பெண்ணை கைது செய்தனர். விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் ப்ரியா என்பதும், அவர் ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ப்ரியாவிடம் நடந்த விசாரணையில், அவர் மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது காவல் துறைக்குத் தெரியவந்துள்ளது. 


அப்போது போலீஸார் நடத்திய விசாரணையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை அந்தப் பெண் தெரிவித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளியை பார்க்க ஆட்டோவில் வந்த மூதாட்டியிடம், நூதன முறையில் செயின் பறித்தது இவர்தான் என்பதும் தெரிய  வந்தது. பின்னர் 3 சவரன்  நகையை பறிமுதல் செய்த போலீசார், ப்ரியாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்  சிறையில் அடைத்தனர். மேலும் தங்கச் சங்கிலியை பறிகொடுத்த மூதாட்டி ஏற்கனவே வண்ணாரப் பேட்டை காவல் நிலையத்தில் அளித்திருந்த புகார் நிலுவையிலிருந்த நிலையில், இப்போது அந்த புகார் தொடர்பான குற்றவாளி சிக்கியுள்ளதாக வண்ணாரப் பேட்டை காவல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இளம்பெண் ஒருவர் பல மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“வலி தாங்க முடியவில்லை” - மனைவி அடிப்பதால் கணவன் தற்கொலை முயற்சி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Husband try lost their life due to wife beating in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே  வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகேஷ் திடீரென்று ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் தற்கொலை செய்வதற்காக இறங்கி உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கத்திக் கொண்டே ஏரியில் நாகேஷ் இறங்கி இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்தவர்கள் நாகேஷை ஏரியை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் நாகேஷ் ஏரியை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அங்கிருந்த மக்களே ஏரியில் குதித்து  நாகேஷை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

பின்பு நாகேஷிடம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று விசாரித்ததில், என் மனைவி என்னை தினமும் அடிக்கிறாள்; என்னால் வலி தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என் குழந்தைகளிடம் கூட என்னை பேச அனுமதிப்பதில்லை. அவர்களிடம் அப்பா இறந்துவிட்டடாக கூறியிருக்கிறாள். அவள் என்னை சித்திரவதை செய்கிறாள். எனக்கும் என் மனைவிக்கும் விவகாரத்து வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வேகமாக பரவி வருகிறது.