



Published on 10/02/2022 | Edited on 10/02/2022
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில், கோதாவரி - பெண்ணாறு - காவிரி இணைப்புத் திட்டத்தை காலம் தாழ்த்தாமல் பணியை துவக்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன், நகைக்கடன் ஆகியவற்றை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மின்சார திருத்தச்சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.