Skip to main content

இந்த கடைய திறந்து வச்சதுனாலதான் ஒரு செகண்டுல என் மனைவியை பறிகொடுத்துட்டு நிக்கறேன்!!! டாஸ்மாக்கால் நிகழ்ந்த விபரீதம்

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

கோவை, ஆனைக்கட்டி தமிழக - கேரளா எல்லையில் இருக்கிறது. அங்கே உள்ள ஒரு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அங்குள்ள மக்கள் பல நாள்கள் போராடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த டாஸ்மாக் கடையை மூடினர். பின்பு அரசியல் தலையீட்டால் மீண்டும் அமோகமாய் திறக்கப்பட்டது அந்த டாஸ்மாக் கடை.
 

kovai


அந்த டாஸ்மாக் கடைதான் ஓர் உயிரைப் பறித்திருக்கிறது. கடந்த திங்கள் அன்று மாலை ஜம்புப்பட்டியைச் சேர்ந்த ரமேஷின் மனைவி ஷோபனா ஸ்கூல் முடிந்து வரும் தனது மகளை கூட்டிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது   அந்த டாஸ்மாக் கடையில் இருந்து மது அருந்திவிட்டு படு போதையில் டூ வீலரில் வேகமாய் வந்த இரு இளைஞர்கள், ஷோபனாவின் டூ வீலரில் மோத ஷோபனாவும், அந்த சிறுமியும் தூக்கி வீசப்பட்டனர்.

தூக்கி வீசப்பட்ட ஷோபனா அந்த இடத்திலேயே பரிதாபமாய் இறந்து போனார். விபத்து ஏற்படுத்திய போதை இளைஞர்களும் பலத்த காயத்தோடு கிடந்தனர். அந்த போதை இளைஞர்களையும், படுகாயங்களோடு துடித்த ஷோபனாவின் சிறுமியையும், மருத்துவமனைக்கு பொதுமக்கள் உதவியோடு கொண்டு செல்லப்பட்டிருக்க, விபத்தை அறிந்த ஷோபனாவின் கணவர் ரமேஷ் ஸ்பாட்டுக்கு வந்தார். வந்தவர் தன் மனைவியின் உடலுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டு கதறி அழுதார். அவரின் உறவினர்களும் சாலையில் அமர்ந்து கொள்ள ரமேஷ் கண்ணீர் மல்க ஊடகங்களிடையே இவ்வாறு பேசினார். 

இந்த டாஸ்மாக் கடை முதலில் இருக்கும்போது நிறைய விபத்துகள் ஏற்படுதுன்னு மக்கள் தொடர்ந்து போராட்டம் பண்ணி கடையை மூடுனாங்க. இந்த கடையை எடுத்த  பின்னாடி இங்கே விபத்துகள் ரொம்பவும் குறைஞ்சு இருந்துச்சு. ஏன்னா இந்த கடையை விட்டுட்டா மன்னார்காடு வரைக்கும் ஒரு டாஸ்மாக் கூட கெடையாது. அதனாலதான் விபத்துகள் ஏற்படாம இருந்துச்சு. இப்ப இந்த ஆளுங்கட்சிக்காரங்க மறுபடியும் கடையைத் திறந்து வச்சதுனாலதான் திரும்பவும் இங்கே குடிகாரர்கள் குவிய ஆரம்பிச்சுட்டாங்க. இந்த கடைய திறந்து வச்சதுனாலதான் ஒரு செகண்டுல என் மனைவியை பறிகொடுத்துட்டு நிக்கறேன். 
 

 

kovai



இந்த கடையை மூடாம என் மனைவியோட உடலை இங்கிருந்து எடுத்துட்டு போக விடமாட்டோம். என கிட்டதட்ட 5 மணி நேரம் ரமேஷ் அமர்ந்து கொண்டதால் தமிழக - கேரளா சாலையில் போக்குவரத்து தடைபட்டது. சாலை மறியலை கைவிடச் சொல்லிய போலிஸிடமும், வட்டாட்சி அலுவலரிடமும் கடையை திறந்து வச்சு ஒரு  செகண்டுல உயிர் போயிருச்சு. அந்த ஒரு செகண்டுல உயிரை எடுத்த அந்த டாஸ்மாக் கடையை எடுக்க முடியாதா? என அவர் கேட்ட கேள்வி, அரசாங்கத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தது போல இருந்தது.

கண்டிப்பாய் கடையை மூடுவோம் என உறுதியளித்த பின்னரே ரமேஷ் தன மனைவியின் உடலை தூக்கிக் கொண்டு போக இசைவு தெரிவித்தார். மதுவால் உயிரைப் பறித்த  இளைஞர்களும், அந்த மதுக்கடையும் கோவையின் மனதில் தீப்பிழம்பாய் எரிந்து கொண்டிருக்கிறார்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடரும் சோகம்; வெள்ளியங்கிரி மலையேறுவோர் கவனத்திற்கு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Ongoing Tragedy; Attention Velliangiri Mountaineers

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், தொடர்ந்து சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளியங்கிரி  மலை  மீது ஏற முயன்ற மூன்று பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (68) வயது. மருத்துவரான இவர் நேற்று நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். இன்று காலை நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்த மூன்று பேரின் சடலங்களையும் கீழே கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 3 பேர் இதற்கு முன்னதாகவே இரண்டு பேர் என மொத்தம் 5 பேர் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது உயிரிழந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதயக் கோளாறு, மூச்சுத்திணறல் பாதிப்பு, சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

கணேசமூர்த்தி எம்.பி. உடல்நிலை குறித்து வைகோ விளக்கம்!

Published on 24/03/2024 | Edited on 25/03/2024
Ganesh Murthy M.P. Vaiko explanation about health

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான கணேசமூர்த்தி ம.தி.மு.க.வின் பொருளாளராக பணியாற்றி வருகிறார். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வருகிறார்.

இத்தகைய சூழலில் இன்று (24.03.2024) காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்றார். என்ன காரணம் என தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது இன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை விழுங்கிய அவர் 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கணேச மூர்த்தி நாடாளுமன்றத்திற்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தன்னுடைய கடமைகளை சிறப்பாகவே செய்தார். இம்முறை கட்சியிலே எல்லோரும் சேர்ந்து துரை வைகோவை வேட்பாளராக்கி நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். கணேச மூர்த்திக்கு அடுத்த சான்ஸ் பார்ப்போம் என்றனர். ஆனால் அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஓட்டெடுப்பு எல்லாம் நடந்தது. 99% பேர் துரை வைகோவை நிறுத்த வேண்டும் என்றனர்.

Ganesh Murthy M.P. Vaiko explanation about health

இது கணேசமூர்த்தி வேண்டாம் என்பதற்காக அல்ல. 2 சீட்டுகளை வாங்கி ஒன்றை துரைக்கும் மற்றொன்றை கணேசமூர்த்திக்கும் கொடுக்கலாம் என்றனர். அது மாதிரியே செய்யலாம் என சொன்னேன். அதன் பிறகு நான் என்ன நினைத்தேன் என்றால் அப்படியே வாய்ப்பு இல்லாமல் போனாலும், சட்டசபை தேர்தல் ஒரு வருடத்தில் வருகிறது. ஒரு நல்ல தொகுதியில் அவரை எம்.எல்.ஏ. ஆக்கி விட்டு, அதன் பிறகு அதைவிட பெரிய பதவி ஏதாவது ஸ்டாலினிடம் சொல்லி வாங்கிக் கொடுக்கலாம் என்று இருந்தேன். சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் காயம் எல்லாம் ஆறிவிடும் என இருந்தேன். 

அதன் பிறகும் அவர் நன்றாக பிரியமாகவே பேசினார். வீட்டில் மகன், மகளிடமும் நன்றாகத் தான் பேசியிருக்கிறார். கொஞ்சம் கூட எதையும் காட்டிக்கொள்ளாமல் நேற்று நான்கு முறை மருத்துவரிடம் பேசியுள்ளார். ஆனால், அப்பொழுதெல்லாம் அவரது பேச்சில் எந்தவித பதற்றமும், சோகத்தில் இருப்பதாக அறிகுறியோ தெரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினர். அதன் பின்னர் தான் அவர் தென்னை மரத்துக்கு போடும் நஞ்சை கலக்கி குடித்திருக்கிறார். அங்கு வந்த கபிலனிடம் ‘இதை குடித்து விட்டேன், நான் போய் வருகிறேன்’ எனக் கூறியுள்ளார். அதன் பின்னர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய முதலுதவி சிசிக்சைகள் அனைத்தும் செய்து விட்டனர்.

அதன்பிறகு, ‘முதலுதவி சரியாக செய்ததால் தான் சிகிச்சை அளிக்க முடிகிறது. 50க்கு 50 சதவிதம் வாய்ப்புள்ளது. இது மாதிரியான நிலையில் ஏற்கனவே பலரை பிழைக்க வைத்திருக்கிறோம். அதற்குரிய உபகரணங்கள் மருத்துவமனையில் உள்ளது. அவற்றை பயன்படுத்தி சிகிச்சை எடுக்கும் போதும் கொஞ்சம் ரத்த அழுத்தம் குறைவதால் அவரை செடேசன் என்ற மயக்க மருந்தில் வைத்திருக்கிறோம்’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆதனால் நம்பிக்கையோடு இருப்போம். 2 நாள் சென்ற பின் தான் எதையும் கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விஷ முறிவுக்கான சிகிச்சையும் எக்மோ சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.