Skip to main content

திராவிடர் கழக எதிர்ப்பால் கைவிடப்பட்ட பல்லக்கு தூக்கும் பட்டினபிரவேசம்; தருமபுரம் ஆதீன பரபரப்பு

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

ஆதீனங்கள்,மடங்கள், என்றாலே சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது என்பார்கள். அந்த வகையில் தருமபுரம் ஆதீனத்தின், புதிய ஆதீனகர்த்தரின் பட்டினப்பிரவேச விவகாரமும் பரபரப்பை உண்டாக்கி  தணிந்திருக்கிறது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ளது தருமபுரம் ஆதீனம். பழமையான சைவ ஆதீனமாக விளங்கும் அந்த ஆதீனத்தின் ஆதீனகர்த்தராக இருந்தா ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த டிசம்பர் 4 ம் தேதி காலமானார். அதனை தொடர்ந்து ஆதீனத்தின் 27 வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த டிசம்பர் 13 ம் ஆதீனகர்த்தராக பதவியேற்று ஞானபீடத்தில் அமர்ந்தார்.

 

dk in dharampuram aadhinam

 

அன்றைய தினமே தருமபுரத்தில் ஏற்பாடு மனிதனை மனிதர்களே தூக்கும் பட்டி பிரவேச நிகழச்சி நடந்தது, வெள்ளிப் பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் அமரந்து வீதி உலாவந்தார். அந்த பல்லக்கை அதற்காக ஆதீனத்தில் உள்ள அடிதட்டு மக்கள் சுமந்துவந்தார்கள். அந்த நிகழ்வை தொடர்ந்து டிசம்பர் 24 ம் தேதி தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு சென்றவரை, அங்கும் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வெள்ளி பல்லக்கில் அமரசெய்து பட்டினப் பிரவேசம் செய்யவைத்தனர். அதே போலவே காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் கோயிலிலும் நடந்தது.

 

dk in dharampuram aadhinam


இந்தநிலையில் மனிதனை மனிதர்களை கொண்டு பல்லக்கு தூக்கும் முறை எனும் பழமையான அடிமை முறையை கண்டித்து, திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்துக்கு சொந்தமான அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும்போது போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி  பிப்ரவரி 12 ம் தேதி திருப்பனந்தாள் காசிமடத்திற்கு வருகைதரவிருந்தார், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து "மனிதர்களை சுமக்கும் பல்லக்கில் பட்டினப்பிரவேசம் செய்யக்கூடாது மீறி செய்தால் திராவிட கழகம் சார்பில் கறுப்புக் கொடி காட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழக நிர்வாகிகளும், நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் அவரவர் கட்சி கொடிகளுடன் திரண்டிருந்தனர்.

 

dk in dharampuram aadhinam


மாலை 7 மணி அளவில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் காரில் வந்து அங்குள்ள விநாயகர் சன்னதியில் இறங்கினார். அவருக்கு காசி மடம் சார்பில் முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் வரவேற்று கோயிலுக்குள்ளும், மடத்துக்குள்ளும் நடந்தை அழைத்துச் சென்றார். அப்போது பட்டின பிரவேசத்திற்கான வெள்ளி பல்லாக்கு ஏதுமில்லாமல் நடந்தை சுற்றியுள்ள வீதிகளிலும் சென்றார்.

இது குறித்து ஆதீன வட்டாரத்தில் விசாரித்தோம்,"  பட்டின பிரவேசம் நடைபெற்றால் போராட்டம் நடத்தப்படும் என்ற தகவல் தருமபுரம் புதிய ஆதீனகர்த்தருக்கு தெரிந்தது, அவரும் சுயமரியாதையோடு பயணித்தவர் என்பதால், அது மரபாகத்தான் ஏற்றுக்கொண்டேனே தவிர, கட்டாயப்படுத்தவில்லை, பல்லக்கினால் விவகாரம் வரும் என்றால் அதை தவிர்த்துவிடலாம் என காசிமடம் நிர்வாகிகளுக்கு கூறியதால், பட்டினப்பிரவேசம் பல்லாக்கு இல்லாமல் இனிதே முடிந்துள்ளது."என்கிறார்கள்.

 

dk in dharampuram aadhinam

 

இதற்கிடையில் மாலை நான்கு மணிக்கு திரண்ட திராவிடர் கழகத்தினருக்கு ஆதின தரப்பில் இருந்து பல்லக்கு முறை இல்லை என அறிவித்ததால், போராட்டம் வெற்றி பெற்றதாக அறிவித்தும், பெரியார், அம்பேத்கர் புகழ் வாழ்க என்றும் தருமபுரம் ஆதீனகர்த்தருக்கு நன்றி என்றும் கூறி முழக்கமிட்டுவிட்டு கலைந்து சென்றனர். 

போராட்டம் நடைபெறும் என்பதால் முன்கூட்டியே போலீசார் குவிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.