கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் எட்டு மாதங்களுக்குப் பிறகு பல கட்டங்களாக தளர்த்தப்பட்டு வருகிறது. பல மாதங்களாக மூடப்பட்டுள்ள கல்லூரிகள் திறப்பதற்கான அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கின்றனர்.
அதன்படி, முதுகலை இறுதியாண்டிற்கான வகுப்புகள் இன்று மீண்டும் துவங்குகின்றன. மாணவ மாணவிகள் முக கவசம் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி ஆர்வமுடன் கல்லூரிகளுக்கு செல்கின்றனர். சென்னை, ராணிமேரி அரசு மகளிர் கல்லூரிக்கு வந்த மாணவிகளுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்வதுடன் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தபின் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.