Skip to main content

அம்பேத்கர் சிலை சேதம்-  பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்.

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் நேற்று இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், அந்த பகுதிக்குட்பட்ட காவல்நிலையத்திற்கு எதிரே உள்ள அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தினர். இந்த தகவல் தமிழகம் முழுவதும் தலித் அமைப்புகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இந்த பிரச்சனையால் வேதாரண்யத்தில் தீவைப்பு, வாகனங்கள் அடித்து நொறுக்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவியது. காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ததோடு, இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தடுத்து அந்த பகுதியை காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. வேதாரண்யத்தில் நிலவி வரும் சூழல் குறித்து, அந்த மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்த தமிழக அரசு இரவோடு இரவாக புதிய அம்பேத்கர் சிலையை கொண்டு வந்து உடைக்கப்பட்ட சிலையை நீக்கிவிட்டு, அதே இடத்தில் புதிய சிலையை கிரேன் மூலம் வைத்தனர்.

 

Ambedkar Statue Damage vellore ranipet vsk party leaders


 

அம்பேத்கர் சிலை சேதப்படுத்தியதை கண்டித்து வட தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

​அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 500- க்கும் மேற்பட்டோர் திரண்டு, சாதி வெறியர்களை கைது செய், தண்டனை கொடு என முழக்கமிட்டவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். திருப்பத்தூர் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதே கோரிக்கையை இவர்களும் முன் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.