Skip to main content

நீயா நானா கடும் போட்டியில் குன்னம் தொகுதி..!  

Published on 30/03/2021 | Edited on 30/03/2021

 

Kunnam constituency admk and dmk computation

 

அதிமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் மாவட்டச் செயலாளருமான ராமச்சந்திரன் மீண்டும் குன்னம் தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக சார்பில், 2011 சட்டமன்றத் தேர்தலில் இங்கு எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற அரியலூர் மாவட்டச் செயலாளர் சிவசங்கர், ராமச்சந்திரனை எதிர்த்து போட்டியிடுகிறார். மீண்டும் 2016இல் குன்னம் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆவலாக இருந்த சிவசங்கரை, அரியலூர் தொகுதிக்குத் திசை திருப்பியது கட்சித் தலைமை. அங்கு போட்டியிட்ட அவர், அரசு கொறடா ராஜேந்திரனிடம் தோல்வியைக் கண்டார். 

 

Kunnam constituency admk and dmk computation


இந்த முறை அரியலூரில் மீண்டும் போட்டியிட்டு அரசு கொறடாவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, கடந்த 5 ஆண்டுகளாக அரியலூர் தொகுதி முழுவதும் தீவிர களப்பணியில் இறங்கி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று நடத்தி மக்கள் மத்தியில் இடம்பிடித்திருந்தார் சிவசங்கர். ஆனால், திடீரென்று அரியலூரில் இருந்து குன்னத்திற்குத் திசை திருப்பிவிட்டது கட்சித் தலைமை. ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்த அனுபவத்தின் அடிப்படையில் மக்களிடம் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார் சிவசங்கர். 

 

Kunnam constituency admk and dmk computation

 

அதிமுக ராமச்சந்திரன் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். சிவசங்கர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சிவசங்கருக்கு வன்னியர் வாக்குகள் கிடைப்பதில் சில தடைகள் இருப்பதாக கூறுகின்றனர். இதனால், வன்னியர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு அதிமுக ராமச்சந்திரன் தாராளம் காட்டி வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். அதனை ஈடுகட்டும் அளவில் லப்பைக்குடிக்காடு போன்ற பகுதிகளில் உள்ள பெருமளவு முஸ்லிம் வாக்குகளும், ஆலத்தூர் ஒன்றியத்தில் நேருவின் மாமாவும் கட்சியின் ஒன்றியச் செயலாளருமான கிருஷ்ணமூர்த்தியின் பலம் அப்பகுதியின் வாக்குகளை சிவசங்கருக்கு கிடைக்கும் என கணக்கு போடுகின்றனர் திமுகவினர். 

 

ராமச்சந்திரன் கடந்த 5 ஆண்டுகளில், ஏழை எளிய மக்களுக்கும் நலிவுற்ற நிலையில் இருந்த தனது கட்சிக்காரர்களுக்கும் பணத்தை வாரி வழங்கி ‘வள்ளல்’ என்று பெயர் எடுத்துள்ளார். சிவசங்கர் வெற்றிபெற வேண்டுமானால் ஆ.ராசாவும், களப்பணியில் இறங்க வேண்டும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். காரணம், ஆ. ராசாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர் சிவசங்கரின் தந்தை மறைந்த சிவசுப்பிரமணியன். அதன் காரணமாக ராசாவும் சிவசுப்பிரமணியன் குடும்பமும் மிகுந்த நெருக்கம் என்கின்றனர். இருவருக்குமிடையான கடும் போட்டியில் ராமச்சந்திரன் சற்று உற்சாகமாக இருப்பதாக தெரிகிறது.  

 

இவர்களோடு நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அருள், தினகரனின் அமமுக சார்பில் அதன் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சாதிக் பாஷா ஆகியோரும் களத்தில் உள்ளனர். இவர்களோடு சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 23 பேர் போட்டி போடுகின்றனர். பிரதான போட்டி சிவசங்கர் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவருக்குமிடையேதான். நாம் தமிழர் கட்சி அருள் சில ஆயிரம் வாக்குகளைப் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; வெளியில் சொன்ன இளைஞர் சுட்டுக் கொலை

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

perambalur mangalamedu two youngsrer incident

 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மங்கலமேடு பகுதியில் உள்ள நரி ஓடை பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (வயது 43). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் வசித்து வருபவர் அஜித் (வயது 26). இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை என குடும்பம் உள்ளது.

 

இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் ரஜினிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த அந்தப் பெண்ணின் கணவர், தனது மனைவி மற்றும் ரஜினி ஆகிய இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், அப்பெண் அதையும் மீறி கணவர் வெளியில் செல்லும் நேரங்களில் ரஜினியை தன் வீட்டிற்கு வரவழைத்து அவ்வப்போது தனிமையில் இருந்து வந்துள்ளார். இவர்களின் இந்த திருமணத்தை மீறிய உறவு ரஜினியின் குடும்பத்தினர் உட்பட மற்ற உறவினர்களுக்கும் தெரியவந்ததற்கு காரணம் அஜித் தான் என்று ரஜினி கருதினார். இதனால் அஜித் மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார் ரஜினி.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியூர் சென்று வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு வீட்டுக்கு திரும்பிய ரஜினி அதிக அளவு மது அருந்திவிட்டு, அந்த போதையில் அஜித் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த ரஜினி தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் அஜித்தை சுட்டார். இதில் அவரது தோள் மற்றும் கையில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. துப்பாக்கியால் சுடப்பட்டதால் ரத்த வெள்ளத்தில் அஜித் சரிந்துள்ளார்.

 

இதனைக்  கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அஜித்தை மீட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அஜித் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அஜித்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ரஜினி அந்த துப்பாக்கியுடன் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சரணடைந்துள்ளார். இதையடுத்து போலீசார் ரஜினி மீது கொலைவழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

தேர்தலுக்கு முன் போடப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

660 road contracts canceled before elections canceled

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு இறுதிச் செய்யப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்களை ரத்துச் செய்து சென்னை பெருநகர மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் சாலைகளை சீரமைக்க சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. பொறுப்பேற்றப் பின்னர், இந்த ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்தார். 

 

தற்போது அந்த குழு அளித்துள்ள ஆய்வறிக்கையில், சாலை சீரமைப்பிற்கான ஒப்பந்தங்களில் உள்ள 3,200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அதைச் சீரமைக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததால், ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.