Skip to main content

இறக்கமும் நல்லது! பங்குச்சந்தைகள் நிலவரம் என்ன?

Published on 01/07/2020 | Edited on 01/07/2020

 

sensex, nifty mumbai share market

 

கரோனா பொது முடக்கம் நீட்டிப்பு மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் தாக்கம் இந்தியப் பங்குச்சந்தைகளிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) வர்த்தகத்தில் எதிரொலித்தது.

 

ஏமாற்றிய சென்செக்ஸ்:

 

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் நேற்று (2020 ஜூன் 30) எப்படியும் 35 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் நிலவிய நிலையில், ஏமாற்றத்துடன் முடிந்தது. முந்தைய நாளில் வர்த்தகம் 34,961 புள்ளிகளில் நிறைவடைந்த நிலையில், நேற்றின் துவக்கமே 35,168.30 புள்ளிகளாக ஏற்றத்தில் இருந்தது. இது உற்சாகத்தை அளித்தாலும், அடுத்தடுத்த செஷன்களில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட சென்செக்ஸ், ஒரு கட்டத்தில் 34,812 புள்ளிகளுக்கும் சென்றது.

 

இறுதியில், சென்செக்ஸ் 34,915.80 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது, முந்தைய நாளைக் காட்டிலும் 45.72 புள்ளிகள் /0.13 சதவீதம் சரிவு ஆகும். வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 35,233.91 புள்ளிகள் வரையிலும் இறங்கியது. இச்சந்தையில் 14 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்திலும், 16 பங்குகள் சரிவிலும் வர்த்தகம் ஆனது. 

sensex, nifty mumbai share market

 

பிஎஸ்இ வர்த்தகம்:

 

நேற்று பி.எஸ்.இ. சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட 2,900 நிறுவனங்களில் 1,258 நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு கணிசமான ஆதாயம் அளித்தன. 1,513 பங்குகளின் விலை குறைந்தன. 129 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

 

தடுமாறிய நிப்டி:

 

தேசிய பங்குச்சந்தையான நிப்டி, 10,382.60 புள்ளிகளில் வர்த்தகத்தைத் தொடங்கியது. அதிகபட்சமாக 10,401.05 புள்ளிகள் வரை உயர்ந்த நிப்டி, இறுதியில் 10,302.10 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. திங்கள் கிழமை நிப்டி இண்டெக்ஸூடன் ஒப்பிடுகையில், இது 10.30 புள்ளிகள் / 0.10 சதவீதம் சரிவாகும். குறைந்தபட்சமாக 10,267.35 புள்ளிகள் வரை சரிவு கண்டது. 

 

ஏற்றமும் இறக்கமும்:

 

நிப்டியில் ஸ்ரீ கெம் 3.12 சதவீதம், மாருதி 2.66 சதவீதம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 2.59 சதவீதம், நெஸ்ட்லே இந்தியா 2.54 சதவீதம், பிரிட்டானியா 2.41 சதவீதம் வரை ஏற்றங்கண்டன. அதேநேரம், பீ.பி.சி.எல்., பவர் கிரிட், சன் பார்மா, கெயில், ஐ.ஓ.சி. ஆகிய பங்குகள் சரிவைச் சந்தித்தன.

 

நிப்டியில் முக்கியமான 50 பங்குகளில் 20 பங்குகளின் விலை ஏற்றத்திலும், 29 பங்குகளின் விலைகள் சரிந்தும், ஒரு பங்கின் விலையில் மாற்றமின்றியும் வர்த்தகம் நடந்தது. தேசிய பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகத்தில் பதிவு செய்திருந்த 1921 பங்குகளில் 780 பங்குகள் கணிசமான ஆதாயத்தை வழங்கின. 1075 பங்குகளின் விலைகள் சரிந்தன. 66 பங்குகளில் எவ்வித ஏற்ற, இறக்கமும் இல்லை.

 

sensex, nifty mumbai share market

 

புதன்கிழமை எப்படி இருக்கும்?:

 

ஜூலை மாதத்தின் முதல் வர்த்தக தினமான இன்றும் (புதன்கிழமை) சென்செக்ஸ் மற்றும் நிப்டியில் நிலையற்றத் தன்மையே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பங்குகள் கரடியின் பிடியில் இருப்பதால், இந்த வாரத்தின் அடுத்தடுத்த நாள்களிலும் சரிவுகள் இருக்கும் என்கிறார்கள் பங்குத்தரகு நிறுவன ஆலோசகர்கள். 

 

நிப்டி 10,300 புள்ளிகளில் முடிந்துள்ள நிலையில், வர்த்தகத்தின் இப்போதைய போக்கைக் கணக்கிடுகையில், ஒன்று 10,200 புள்ளிகளுக்குக் கீழாகச் செல்ல வேண்டும் அல்லது 10,450 புள்ளிகளைக் கடக்க வேண்டும். அப்போதுதான் சந்தையில் அடுத்தக்கட்ட நகர்வைப் பற்றி நெருக்கமாகக் கணிக்க முடியும் என்கிறார்கள்.

 

சாய்ஸ் புரோக்கிங் நிறுவன ஆலோசகர் சுமித் பகாடியா, ''நிப்டி இண்டெக்ஸ் 10,100 புள்ளிகள் வரை சரிவடையவே கூடுதல் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார். ஒருவேளை, நகர்வில் நேர்மறையான போக்கு தென்படும் பட்சத்தில் 10,500 புள்ளிகளைத் தொடவும் வாய்ப்பு உள்ளதாகக்'' கூறுகிறார். நிப்டியின் நிலையற்ற வர்த்தகப் போக்கை ரேலிகர் புரோக்கிங் நிறுவன துணைத்தலைவர் அஜித் மிஸ்ரா, நேர்மறையாகவும் பார்க்கிறார்.

 

கடந்த நான்கு அமர்களின் அடிப்படையில் கணக்கிடும்போது, தேசிய பங்குச்சந்தையில் 10,200 - 10,400 புள்ளிகளாக வர்த்தகம் ஊசலாடும் என்கிறார். என்றாலும், சந்தையில் காணப்படும் இறக்கத்தையும் முதலீட்டுக்கு உகந்ததாக மாற்றிக்கொள்ளலாம் என்கிறார். 

 

sensex, nifty mumbai share market

 

ஆதாயம் அளித்த பங்குகள்:

 

ஜனவரி- மார்ச் காலாண்டு முடிவுகள் அடிப்படையில் செவ்வாயன்று சில பங்குகள் கணிசமான ஆதாயத்தை அளித்தன. அதன்படி, ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர், எஸ்கார்ஸ்ட், ஏ.சி.சி., ரைட்ஸ், சோனாடா சாப்ட்வேர், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், மயூர் யுனிகோட்டர்ஸ், டால்புரோஸ் ஆட்டோ, டான்லா சொல்யூஷன்ஸ், அக்சார்கெம் இண்டியா, ஓரியண்டல் அரோமேடிக்ஸ், காமத் ஹோட்டல்ஸ், எனர்ஜி டெவலப்மென்ட், புளூ டார்ட் எக்ஸ்பிரஸ், சுமித் செக்யூரிட்டீஸ் ஆகிய பங்குகள் கணிசமான ஆதாயம் அளித்தன.

 

முதலீட்டு ஆர்வம்:

 

http://onelink.to/nknapp

 

முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீட்டு அடிப்படையில் ஐ.டி.பி.ஐ. வங்கி, அலோக் இண்டஸ்ட்ரீஸ், குஜராத் காஸ், எப்.டி.சி. மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. இதனால் மேற்கண்ட பங்குகளின் விலையும் இன்றும் கணிசமாக உயரக்கூடும் எனத் தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.