Skip to main content

கடவுள் கூறிய செய்தி;  பிரதமர் மோடியைத் தாக்கிய பிரியங்கா காந்தி

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

Priyanka Gandhi attacked PM Modi for  God's Message

 

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே, எதிர்க்கட்சிகள் உள்ளடக்கிய இந்தியா கூட்டணியினர் 26 கட்சிகளை கொண்டு தங்கள் ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். மேலும், பீகார், பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி தங்களது அணியை வலுவாக்கி வருகின்றனர்.

 

அதே வேளையில், பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தங்களது ஆதரவை பெருக்கி வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை பல அரசியல் கட்சிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான்,  டோங்க் மாவட்டத்தில் உள்ள நிவாயில் இந்தியா ரசோய் யோஜனா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார்.

 

அப்போது பேசிய அவர், “ இந்தத் தேர்தல் இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டி அல்ல. உங்கள் எதிர்காலத்தை பற்றிய தேர்தல். உங்கள் உரிமையை வழங்க யார் தயாராக இருக்கிறார்கள் என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் உங்கள் உரிமைகளை மீண்டும் மீண்டும் பறித்துள்ளது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். மக்களாகிய நீங்கள் தினமும் ஒரு பிரச்சனையை எதிர்கொள்கிறீர்கள். எனவே இந்த முறை புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள். ஒரு வேளை ராஜஸ்தானில் பா.ஜ.க ஆட்சி அமைந்து விட்டால் காங்கிரஸ் கொண்டு வந்த அனைத்து நல்ல திட்டங்களும் நிறுத்தப்படும். மக்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்காவிட்டால் அவர்களே தீமைகளை எதிர்கொள்ள நேரிடுவார்கள்.

 

பணவீக்கம் விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்துள்ளது. இன்று (10-09-23) நடைபெற்ற ஜி20 மாநாடு நடைபெறும் இடத்தில் மழை தண்ணீர் புகுந்து வெள்ளத்தில் மூழ்கியதை கண்டேன். நமது நாட்டு மக்கள் சொல்ல பயந்ததை கடவுள் உங்களுக்கு இதன் மூலம் கூறியிருக்கிறார் என்று தோன்றுகிறது. உங்கல் அகந்தையை குறைத்து கொள்ளுங்கள் என்று இந்த மழை வெள்ளம் மூலம் கடவுள் பிரதமருக்கு கூறியிருக்கிறார். அதனால், நாடுதான் உங்களை ஒரு தலைவர் ஆக்கியது. மக்களை உயர்ந்தவர்களாக ஆக்குங்கள்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.