Skip to main content

24 மணி நேரத்தில் இந்தியாவில் கரோனா உச்சம்... 13 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு!

Published on 24/07/2020 | Edited on 24/07/2020

 

h

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள், தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் கரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகின்றது. தினமும் 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,38,635லிருந்து 12,87,945ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 7,82,607லிருந்து 8,17,209 ஆக உள்ளது. கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,861லிருந்து 30,601ஆக பதிவாகி உள்ளது.  

 

சார்ந்த செய்திகள்